இந்திய அணி சொதப்பல்
ஆசிய கோப்பை தொடரில் சொதப்பிய இந்திய அணி, ஆஸ்திரேலிய தொடரிலாவது கம்பேக் கொடுக்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் முதல் போட்டியில் 208 ரன்களை குவித்தும் மோசமாக தோல்வியடைந்தது. கடைசி சில ஓவர்களில் பவுலிங் செய்யாதது தான் பிரச்சினையாக பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவின் உண்மையான பலவீனம் குறித்து கவாஸ்கர் பேசியுள்ளார்.
கவாஸ்கர் விளக்கம்
இதுகுறித்து பேசிய அவர், இந்தியாவுக்கு வந்துள்ள பிரச்சினை புதிதல்ல, கடந்த சில ஆண்டுகளாகவே இருந்து வருகிறது. அதாவது ஜஸ்பிரித் பும்ரா அணியில் இல்லையென்றால் ஆட்டம் கடினம் என நினைக்கிறார்கள். பும்ரா இருந்தால் எவ்வளவு குறைவான ஸ்கோரையும் கட்டுப்படுத்துகின்றனர். ஆனால் அவர் இல்லையென்றால் 200 ரன்களையும் கட்டுப்படுத்த முடிவதில்லை.
சரி செய்யுங்கள்
ஜஸ்பிரித் பும்ரா கண்டிப்பாக தேவை என்ற சூழல் இருந்த போதும், அவர் முழுமையாக குணமடைந்தால் மட்டுமே ப்ளேயிங் 11ல் சேர்க்கப்படுவார் என பிசிசிஐ கூறுகிறது. எனவே இதனை முதலில் சரி செய்ய வேண்டும். அவர் இல்லையென்றால் நம்பிக்கையை விட்டுவிடக்கூடாது. எப்படிபட்ட ஸ்கோரையும் கட்டுப்படுத்துவோம் என நினைக்க வேண்டும்.
2வது டி20 போட்டி
ஆஸ்திரேலியாவுடன் இன்று நடைபெறும் 2வது டி20 போட்டியில் இந்தியா வெற்றி பெற்றே தீர வேண்டும். இந்தியாவின் முன்னணி வீரராக பார்க்கப்படும் ஜஸ்பிரித் பும்ரா முழுமையாக குணமடைந்துவிட்டதாகவும், அவர் இன்றைய போட்டியில் விளையாடுவார் என்றும் தகவல் வெளியாகியுள்ளது.