ஐபிஎல்
சிஎஸ்கே, டெல்லி கேப்பிடல்ஸ், ஆர்சிபி ஆகிய அணிகள் டாப் 3 இடங்களில் இருப்பதால் கோப்பையை வெல்ல கடும் போட்டி இருக்கிறது. இதற்காகவே ஐபிஎல்-ஐ மீண்டும் நடத்த வேண்டும் என ரசிகர்கள் கேட்டு வருகின்றனர். குறிப்பாக 'ஈ சாலா கப் நம்தே'
எனக்கூறிவிட்டு ஒவ்வொரு ஆண்டும் சொதப்பும் ஆர்சிபி அணி இந்தாண்டு படு தீவிர ஃபார்மில் உள்ளது. இதனால் இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளதில் பலரும் வருத்தத்தில் உள்ளனர்.
ஐதராபாத் அணி
இந்நிலையில் ஐபிஎல் தொடர் தடைபட்டுள்ளதில் சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கு ரொம்ப நிம்மதியாக இருக்கும் என கவாஸ்கர் கூறியுள்ளார். இதுகுறித்து பேசிய அவர், சன்ரைசரஸ் ஐதராபாத் அணிக்கு இந்த சீசனின் தொடக்கம் மிக மோசமாக அமைந்துவிட்டது. இந்த தொடர் ஒத்திவைக்கப்பட்டது அவர்கள் ஒரு வரம். தற்போது நிம்மதியாக இருப்பார்கள். பொறுமையாக பிரச்னைகளை சரிசெய்துக்கொள்ளலாம் எனத்தெரிவித்துள்ளார்.
புது சிக்கல்
எப்போதும் சிறப்பாக செயல்பட்டு வரும் ஐதராபாத் அணி இந்தாண்டு மிக மோசமாக ஆடியது. 7 போட்டிகளில் விளையாடி வெறும் 1 ஒரே ஒரு போட்டியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. இதனால் டேவிட் வார்னர் கேப்டன் பதவியில் இருந்து நீக்கப்பட்டு கேன் வில்லியம்சன் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
புது சிக்கல்
ஐபிஎல் தொடர் செப்டம்பர் மாதம் நடத்தப்பட்டால் நியூசிலாந்து வீரர்கள் கலந்துக்கொள்ள மாட்டார்கள் எனத்தெரிகிறது. ஏனென்றால் நியூசிலாந்து அணி வரும் செப்டம்பர் மாதத்தில் பாகிஸ்தானுக்கு எதிராக 3 ஒருநாள் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடவுள்ளது. இதனால் கேன் வில்லியம்சனுக்கு பதிலாக மீண்டும் ஒரு புதிய கேப்டனை தேட வேண்டும்.