வந்தார் ரெய்னா
பெங்களூரு அணிக்கு நம்பிக்கை பிறந்தது. அடுத்து களத்துக்கு வந்தார் ரெய்னா. இருவரும் நிதானமாக ஆடினர். நோபாலில் கிடைத்த ப்ரீ ஹிட் பந்துகளில் மேக்சிமம் ரன்களை எடுத்தனர்.
ரெய்னா சாதனை
ஒரு கட்டத்தில் ரெய்னா, அருமையான பந்துகளை பவுண்டரிகளுக்கு விரட்டினார். 15 ரன்களை எடுத்தால் 5,000 ஆயிரம் ரன்களை கடக்கும் முதல் வீரர் என்ற பெருமையை பெறலாம் என்ற சாதனைக்காக காத்திருந்தார்.
5,000 ரன்கள் முதல் வீரர்
அதேபோல... இந்த போட்டியின் மூலம் 5,000 ரன்களை கடந்து ஐபிஎல் கிரிக்கெட் வரலாற்றில் இந்த சாதனையை படைத்த முதல் வீரர் என்ற பெருமையை பெற்றார். அவருக்கு அடுத்தபடியாக இந்த சாதனையை படைக்க காத்திருப்பது கோலி.
காத்திருப்பவர்கள் யார்?
அவரை தொடர்ந்து, ரோகித் சர்மா 4493 ரன்களுடன் இந்த சாதனையை நடப்பு தொடரில் படைப்பாரா என்று தெரியவில்லை. ரெய்னாவின் இந்த புதிய சாதனையால் உற்சாகம் அடைந்த ரசிகர்கள் சின்ன தல... சின்ன தல என்று அரங்கத்தில் குரலெழுப்பி மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டனர்.