ரெய்னா
அதிரடி வீரரான ரெய்னா, சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெற்றுவிட்டார்.இதன் காரணமாக ரெய்னாவின் பேட்டிங் ஃபார்ம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. கடந்த சீசனில் 12 போட்டிகளில் விளையாடிய ரெய்னா வெறும் 160 ரன்கள் மட்டும் தான் அடித்திருந்தார். இதன் காரணமாக சென்னை அணியின் பிளேயிங் 11இல் இருந்து ரெய்னா நீக்கப்பட்டார்.
அதிர்ச்சி
அணியிலிருந்து நீக்கப்பட்ட போதே ரெய்னா அடுத்த ஆண்டு சென்னை அணிக்காக விளையாட மாட்டார் என்ற தகவல் வெளியானது. அதனை உறுதிப்படுத்தும் விதமாக தக்கவைக்கும் பட்டியலில் ரெய்னா இல்லை. மேலும் ஏலத்தில் கூட ரெய்னாவை சென்னை அணி தேர்வு செய்யாது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதனால் சின்ன தல ரசிகர்கள் மிகவும் அதிர்ச்சியில் உள்ளனர்.
லக்னோ
இந்த நிலையில், ரெய்னா காஷ்மீரை சேர்ந்தவராக இருந்தாலும் , அவர் பிறந்து வளர்ந்தது எல்லாம் உத்தரப் பிரதேசத்தில் தான். தற்போது லக்னோ அணி அடுத்த ஐ.பி.எல். தொடரில் களமிறங்குவதால் அந்த அணிக்கு கேப்டனாக ரெய்னா செயல்படுவார் என்ற தகவல் வெளியாகியுள்ளது.இதன் காரணமாகவே ரெய்னாவை சென்னை அணி தேர்வு செய்யாமல் இருந்திருக்கலாம் என தெரிகிறது.
கேப்டன்
ரெய்னா ரன் அடிக்காத காரணத்தால் சென்னை அணி அவரை தேர்வு செய்யவில்லை என்பதில் உண்மையில்லை. ஏனெனில் ரெய்னா போன்ற வீரர் பார்ம்க்கு திரும்புவது மிகவும் சுலபம் என்பது தோனியே அறிந்தது தான். தனது சொந்த ஊரான லக்னோவுக்கு விளையாட வேண்டும் என்று ரெய்னா விரும்பயதால் இந்த முடிவு எடுக்கப்பட்டு இருக்கலாம். இதனால் ரெய்னாவை மஞ்சள் நிற ஜெர்சியில் இனி காண முடியாது. ஆனால் புதிய அணியில் கேப்டனாக அவரை காணலாம் என்பது ரசிகர்களுக்கு மகிர்ச்சியான செய்தி தான்.