டி20 தொடர்
இப்போட்டியில் முதலில் விளையாடிய ஆஸ்திரேலிய அணி 186/ 7 ரன்களை குவித்தது. கடின இலக்கை நோக்கி களமிறங்கிய இந்திய அணியை சூர்யகுமார் யாதவ் - விராட் கோலி ஜோடி காப்பாற்றினர். சீரான வேகத்தில் ரன் குவித்த கோலி 48 பந்துகளில் 63 ரன்களை குவித்தார். மறுமுறம் அதிரடி காட்டிய சூர்யகுமார் யாதவ் 36 பந்துகளில் 5 சிக்ஸர்கள், 5 பவுண்டரிகள் உட்பட 69 ரன்களை விளாசி அசத்தினார்.
சூர்யகுமார் யாதவின் பேச்சு
இந்நிலையில் அதிரடிக்கு பின் சூர்யகுமார் யாதவ் தனது கருத்துகளை பகிர்ந்துக்கொண்டார். அதில், இந்த போட்டியில் முக்கிய தாக்கத்தை ஏற்படுத்த வேண்டும் என முன்பே யோசித்திருந்தேன். அதன்படியே செயல்பட்டேன். எனது வழக்கமான 2 - 3 ஷாட்களை ஆட நினைத்தேன், ஆனால் மிட் ஆஃப் திசையில் அடித்து பழக வேண்டும் என்பதற்காகவே அங்கு பவுண்டரிகளை அடித்தேன்.
மிகவும் பிடித்துள்ளது
இந்திய அணியின் பேட்டிங் வரிசையில் 4வது இடம் எனக்கு மிகவும் பிடித்துள்ளது. தற்போது இந்த இடத்தில் என்னால் சிறப்பாக விளையாட முடியும் என நம்பிக்கை உள்ளது. 4வது வீரராக விளையாடும் போது பல கடினமான சூழல்களும் வரத்தான் செய்கின்றன. ஆனால் அவற்றினை சவாலாக கருதி சாதிப்பது நன்றாக உள்ளது எனக் கூறினார்.
மறைமுக கோரிக்கைகள்
இதன் மூலம் சூர்யகுமார் யாதவ், தனக்கு தொடர்ந்து 4வது இடத்தை கொடுக்குமாறு மறைமுகமாக கோரிக்கை வைப்பதாக தெரிகிறது. கடந்த 5 - 6 மாதங்களாக சூர்யகுமார் யாதவ் கலக்கி வருகிறார். எனினும் சில போட்டிகளில் அவரின் பேட்டிங் வரிசை மாற்றப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. எனவே அதனை சரிசெய்ய பயன்படுத்திக் கொண்டார் எனத் தெரிகிறது.