தவறாக நடந்த ரசிகர்
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பல நாடுகளிலும் கிரிக்கெட் போட்டிகளை காண ரசிகர்களுக்கு அனுமதி அளிக்கப்படாமல் இருந்தது. ரசிகர்கள் இல்லாததால் மைதானங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. எனினும் இங்கிலாந்தில் தற்போது ஒவ்வொரு போட்டிகளுக்கும் பார்வையாளர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு வருகிறது. போட்டிகளின் போது ரசிகர்கள் சேட்டைகளில் ஈடுபடுவது அடிக்கடி நடந்து வரும் விஷயம் தான். ஆனால் ஒரு ரசிகரோ எந்தவித அச்சமும் இன்றி அருகில் இருந்த பெண்ணிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டுள்ளார்.
Loves the cricket/tit #Surrey #pope ShotMate_ CricketRustling pic.twitter.com/qVlziGZHUg
— Jordan Holmes (JordanHolmes201) June 25, 2021
கேமராவில் பதிவு
அப்பெண், பின்னால் இருந்த நபர்களிடம் பேச எழுந்து நின்று சற்று சாய்ந்த நிலையில் இருந்த போது, அந்த நபர் தவறான காரியத்தில் ஈடுபட்டது அப்படியே கேமராவில் பதிவாகியுள்ளது. இதை ரசிகர்கள் சிலர் வீடியோ எடுத்து இணையத்தில் வெளியிட, இப்போது அந்த சம்பவம் சர்ச்சையாகியுள்ளது. இதைப் பார்த்த ரசிகர்கள் பலரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.
மன்னிக்க முடியாது
இந்நிலையில், இந்த அருவருக்கத்தக்க காரியத்தில் ஈடுபட்ட நபர் அப்பெண்ணின் கணவரா, அல்லது காதலரா என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், தற்போது அவர்கள் இருவரும் யார் என்ற விவரம் தெரியவில்லை. எப்படி இருந்தாலும், அந்த பெண்ணுக்கு தெரிந்தவராகவே இருந்தாலும், பொதுவெளியில், அதுவும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ஆர்வமுடன் பார்க்கும் கிரிக்கெட் நடந்துக் கொண்டிருக்கும் போது பட்டப் பகலில் இதுபோன்ற செயலில் ஈடுபட்டதை ஏற்றுக் கொள்ள முடியாது என பலரும் விமர்சித்து வருகின்றனர். இதனால் சில்மிஷத்தில் ஈடுபட்ட நபரை கைது செய்ய வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்துள்ளது.
போய் வேலைய பாருங்க
அதேசமயம், இதிலென்ன தவறு என்று கேட்கும் குரூப்பும் மல்லுக்கட்டிக் கொண்டிருக்கிறது. அந்த நபர் அப்படியொரு செயலை செய்த போது, அப்பெண்ணே அதற்கு பெரிதாக ரியாக்ட் செய்ததாக தெரியவில்லை. அப்படி இருக்கும் போது, இதை ஏன் கைது லெவலுக்கு கொண்டுச் செல்ல வேண்டும். பேசமா போய் வேலைய பாருங்க என்ற தொனியிலும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.