இந்தியாவுக்கு சிக்கல்
இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானிடம் தோல்வியை தழுவியது. இதனால் அடுத்து இருக்கும் பெரிய அணியான நியூசிலாந்தை வென்றால் மட்டுமே அரையிறுதி வாய்ப்பை பிரகாசப்படுத்த முடியும். இதற்காக இந்திய அணியின் ப்ளேயிங் 11ல் கூடுதல் கவனம் செலுத்தப்படுகிறது. குறிப்பாக அணிக்கு 6வதாக ஒரு பவுலர் நிச்சயம் தேவை என்ற சூழல் உள்ளது.
ஹர்திக்
இந்த இக்கட்டான சூழலில் தற்போது அனைவரின் கவனமும் ஹர்திக் பாண்ட்யா மீது திரும்பியுள்ளது. பாகிஸ்தானுடனான போட்டியின் போது பாண்ட்யாவுக்கு தோள்பட்டையில் காயம் ஏற்பட்டது. இதனால் உடனடியாக அவர் களத்தில் இருந்து வெளியேற்றப்பட்டு ஸ்கேன் எடுப்பதற்காக அழைத்துச்செல்லப்பட்டார். நியூசிலாந்துடனான போட்டியில் விளையாடுவாரா என்ற குழப்பம் நீடித்தது.
கம்பேக் கொடுக்கும் பாண்ட்யா
இந்நிலையில் நிச்சயம் ப்ளேயிங் 11 இருப்பார் என்பது உறுதியாகியுள்ளது. காயத்தில் இருந்து பூரண குணமடைந்துள்ள பாண்ட்யா, நேற்று பவுலிங் பயிற்சியும் மேற்கொண்டுள்ளார். வலைப்பயிற்சியின் போது சுமார் 15 நிமிடங்கள் வரை தொடர்ந்து ஹர்திக் பாண்ட்யா பவுலிங் பயிற்சி மேற்கொண்டுள்ளார். அதில் அவரின் செயல்பாடுகள் மிகச்சிறப்பாக உள்ளதாகவும் அணி தரப்பில் இருந்து தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே நியூசிலாந்துக்கு எதிராக அவரின் பவுலிங் கண்டிப்பாக இருக்கும்.
மறைந்திருக்கும் உண்மை
ஹர்திக் கம்பேக் கொடுப்பதற்கு தோனி மறைமுக காரணமாக இருந்துள்ளார். கடந்த 2 வருடங்களாக பந்துவீச்சில் பெரிதாக ஈடுபடாமல் உள்ள பாண்ட்யா, நேற்று திடீரென வலைப்பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அவரின் செயல்பாடுகளை ஆலோசகர் எம்.எஸ்.தோனி அருகில் இருந்து கண்காணித்துள்ளார். மேலும் தவறுகளையும் சரிசெய்ய அறிவுரை கூறியுள்ளார். தோனி தான் அவரை கட்டாயப்படுத்தி பவுலிங் போட வைத்துள்ளதாக கூறப்படுகிறது. இந்த பயிற்சி முடிந்த பிறகு தோனியை கட்டிப்பிடித்து ஹர்திக் நன்றி கூறியுள்ளார். 2 வருடமாக ஃபார்மில் இல்லாத பாண்ட்யாவை மீண்டும் பவுலிங் போட உத்வேகமாக இருந்துள்ளார் தோனி. இதுகுறித்த புகைப்படமும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
Recommended Video
தோனியின் அறிவுரை
சர்வதேச போட்டிகளில் ஹர்திக் பாண்ட்யா கலக்கியதற்கு அடித்தளம் போட்டவர் தோனி என்று கூறலாம். பாண்ட்யாவின் ஆரம்ப காலக்கட்டத்தில் ஸ்டம்பிற்கு பின்னால் இருந்து எப்படி பந்துவீச வேண்டும், முக்கியமான நேரத்தில் விக்கெட் எப்பட் எடுப்பது என்பதை தோனிதான் அவருக்கு கூறியிருந்துள்ளார். வங்கதேசத்தை கடைசி ஒரு ரன்னில் இந்தியா வீழ்த்தியதை இதற்கு உதாரணமாக கூறலாம்.