குற்றச்சாட்டு
இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியடைந்ததற்கு பேட்ஸ்மேன்கள் மீது அதிக விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டன. குறிப்பாக டாப் ஆர்டர் மிக மோசமாக இருந்ததாக குற்றம்சாட்டப்பட்டது. ஆனால் தோல்விக்கு இந்தியாவின் பந்துவீச்சும் முக்கிய காரணம். 150 ரன்களுக்கு ஒரு விக்கெட்டை கூட இந்திய பவுலர்களால் எடுக்க முடியவில்லை.
சிரமப்பட்ட கோலி
இந்திய அணியில் புவனேஷ்வர் குமார், ஜஸ்பிரித் பும்ரா, முகமது ஷமி, வருண் சக்கரவர்த்தி, ஜடேஜா என நட்சத்திர பவுலர்கள் இருந்தனர். ஆனால் 6வது பவுலர் இல்லாதது கோலியின் கைகளை கட்டிப்போட்டது போன்று ஆனது. ஏதாவது ஒருவிக்கெட்டையாவது கைப்பற்ற கோலி பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு பாத்தார். ஆனால் அவரிடம் பயன்படுத்த 6வது வீரர் இருந்திருந்தால், ஏதேனும் ஒரு ட்விஸ்ட் ஏற்பட்டிருக்கலாம்.
Recommended Video
பந்துவீச்சு
ஆட்டத்தின் போது திடீர் திருப்பங்களை கொண்டு வர 6வது பவுலர் தேவை என பல்வேறு கோரிக்கைகள் எழுந்து வந்தன. ஹர்திக் பாண்ட்யா பந்துவீசாமல் இருப்பதால் அவருக்கு பதிலாக ஷர்துல் தாக்கூர் கொண்டு வரப்பட வேண்டும் எனக்கோரப்பட்டது. இந்நிலையில் அதற்கான நற்செய்தி கிடைத்துள்ளது.
6வது பவுலர் ரெடி
நேற்று இரவு ஹார்திக் பாண்ட்யாவுக்கு பிட்னஸ் டெஸ்ட் நடத்தப்பட்டது. அப்போது அவர் சிறப்பாக பந்துவீசியுள்ளார். இதனைத் தொடர்ந்து பயிற்சியின்போது பந்துவீச அவருக்கு அனுமதி வழங்கப்பட்டது. அப்போதும் சிறப்பாக பந்துவீசினார். உடல் அளவில் எந்தவித பிரச்னைகளும் அவருக்கு இல்லை எனத் தெரிகிறது. எனவே அடுத்து வரும் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் நிச்சயம் குறைந்தது 2 ஓவர்களாவது ஹர்திக் பாண்ட்யா பந்துவீசுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா - நியூசிலாந்து போட்டி வரும் அக்டோபர் 31ம் தேதி நடைபெறுகிறது.