இயர்ல் கருத்து இதுதான்
இந்த நிலையில் இதுகுறித்து இயர்ல் கூறுகையில், போட்டித் தொடரை நடத்துவது தற்போதைய சூழலில் நடக்க முடியாத விஷயமாகும். மிக மிக கடினம். நிச்சயம் வாய்ப்பில்லை. 16 அணிகளை கொண்டு வந்து வைத்து போட்டியை நடத்துவது சுலபமல்ல. உலக நாடுகள் கொரோனாவிலிருந்து மீளவில்லை இன்னும். பாதிப்பும் அதிகரித்துக் கொண்டேதான் போகிறது. நின்றபாடில்லை என்றார் அவர்.
ஐசிசி முடிவு
கடந்த வாரம் ஐசிசி இந்த விவகாரம் குறித்து விவாதித்தது. அடுத்த மாதம் இதுகுறித்து முடிவெடுக்கப்படும் என அப்போது தீர்மானிக்கப்பட்டது. ஆனால் இயர்ல் சொல்வதைப் பார்த்தால் போட்டித் தொடர் சந்தேகம்தான் என்று தெரிகிறது. இந்த போட்டித் தொடர் தொடர்பாக அடுத்த மாதம் கூடி சூழ்நிலைக்கேற்ப முடிவெடுக்கப்படும் என்று ஐசிசி தெரிவித்துள்ளது.
ஐபிஎல்லுக்கு வாய்ப்பு
ஆனால் தற்போதைய நிலவரப்படி போட்டித் தொடர் தள்ளிப் போடப்படலாம். அந்த இடத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன. தற்போது ஐபிஎல் போட்டி காலவரையின்றி தள்ளி வைக்கப்பட்டுள்ளது. ஒரு வேளை டி20 உலகக் கோப்பை போட்டிகள் நடைபெறாவிட்டால் அந்த நேரத்தில் ஐபிஎல் போட்டிகள் நடைபெற வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
ஆஸ்திரேலியாவில் பாதிப்பு
உலக அளவில் கொரோனாவால் பாதிக்கப்பட்ட நாடுகளில் ஆஸ்திரேலியாவும் ஒன்றாகும். இங்கு கிட்டத்தட்ட 7000 பேருக்கு மேல் பாதிக்கப்பட்டுள்ளனர். அதில் 6000 பேருக்கு மேல் டிஸ்சார்ஜ் ஆகி விட்டனர். இங்கு தற்போது கொரோனா மட்டுப்பட்டுள்ளது. என்றாலும் கூட ஆஸ்திரேலியா அரசு மிக மிக கவனமாகவும், கட்டுப்பாட்டுடனும் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.