|
ரகளை
இந்த போட்டியில் இந்திய அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, பாகிஸ்தானை மண்ணை கவ்வ செய்தது. இதையடுத்து பாகிஸ்தானின் பல நகரங்களிலும் டிவி பெட்டிகளை போட்டு உடைத்து ரசிகர்கள் ரகளை செய்தனர்.
வெற்றி, தோல்வி மாரடைப்பு
சில உணர்வுப் பூர்மான போட்டிகளை பாரக்கும்போது, தோல்வியோ அல்லது வெற்றியோ, எந்த ஒரு அதிர்ச்சியையும் தாங்கிக்கொள்ள முடியாமல் மாரடைப்பால் ரசிகர்கள் உயிரிழந்துள்ள சம்பவங்கள் உலகமெங்கும் நடந்துள்ளன.
கொடுமை
பாகிஸ்தான் ரசிகர்கள் எப்போதுமே உணர்ச்சிகரமானவர்களாகவே உள்ளனர். அதிலும் இதய நோயாளிகள் என்றால் கேட்கவே வேண்டாம்.. எனவே, இந்த போட்டி காரணமாக, அவர்களுக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சிய பாகிஸ்தான் அரசு, இதய நோய் மருத்துவமனையில் இருந்த டிவி பெட்டிகளை அகற்றியுள்ளது.
டைம்பாஸ் போச்சே
பாகிஸ்தானின் குஜ்ரன்வாலா நகரிலுள்ள அரசு மற்றும் தனியார் இதய நோய் சிகிச்சை மருத்துவமனைகளில் நோயாளிகள் பொழுதுபோக்க பொருத்தப்பட்டிருந்த டிவி பெட்டிகள் சனிக்கிழமை அவசரமாக அகற்றப்பட்டுள்ளது.
இதுக்கெல்லாமா
போட்டியை பார்த்துவிட்டு இதய நோயாளிகள் உணர்ச்சிவசப்படக்கூடாது என்பதே இந்த ஏற்பாட்டுக்கு காரணம் என்று மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. அடப்பாவிகளா.. இதுக்கெல்லாமா உணர்ச்சி வசப்படுவீங்க? இன்னும் நீங்க பார்க்க வேண்டியது எவ்வளவோ இருக்கே பங்காளி.