மத ரீதியான தாக்குதல்
இது ஒரு புறம் இருக்க இந்திய அணியின் தோல்விக்கு பந்துவீச்சாளர் முகமது ஷமி தான் காரணம் என ரசிகர்கள் குற்றம்சாட்டி வருகின்றனர். அதுவும் குறிப்பாக அவர் இஸ்லாமிய சமூதாயத்தை சேர்ந்தவர் என்பதால் வேண்டுமென்றே சுலபமாக பந்துவீசியதாக சில வஞ்சக ரசிகர்கள் பதிவிட்டு வருகின்றனர்.
காரணம்
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் முகமது ஷமி வீசிய 18 வது ஓவரில் மட்டும் 17 ரன்கள் சென்றது. இதனால் ஆந்த ஓவரிலேயே பாகிஸ்தான் வெற்றி பெற்றது. இந்திய அணியின் தோல்வி அதற்கு முன்பே உறுதியாகிவிட்டது. எனவே முகமது ஷமிக்கு ஆதரவாக முன்னாள் வீரர்கள் குரல் கொடுத்து வருகின்றனர்.
திடீர் ஆதரவு
இந்நிலையில் இந்த சர்ச்சையில் பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான் தலையிட்டுள்ளார். முகமது ஷமிக்கு ஆதரவாக தனது ட்விட்டர் பக்கத்தில் ட்வீட் போட்டுள்ள அவர், ஒரு வீரர், தனது நாட்டிற்காக தாங்கிக்கொள்ளும் அழுத்தங்கள், கஷ்டங்கள், தியாகங்கள் ஆகியவை கணக்கில்லாதது. முகமது ஷமி ஒரு உலகின் தலைசிறந்த பவுலர். உங்கள் நாட்டு வீரர்களை நீங்கள் முதலில் மதிக்க கற்றுக்கொள்ளுங்கள். கிரிக்கெட் என்பது மக்களை ஒன்றிணைக்கிறது. தயவு செய்து மக்களை பிரிக்காதீர்கள்.
பிசிசிஐ அமைதி
இந்த பிரச்னை குறித்து முன்னாள் வீரர்கள் சச்சின் டெண்டுல்கர் உள்ளிட்ட பலரும் ஆதரவுக்குரல் வெளியிட்டு வருகின்றனர். பாகிஸ்தான் வீரர் கூட குரல் கொடுத்துவிட்டார். ஆனால் இந்த விவகாரம் குறித்து இந்திய கிரிக்கெட் கவுன்சில் இதுவரை எந்தவிதமான அறிக்கையும் வெளியிடவில்லை. இதனால் பிசிசிஐ மீதே ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.