கட்டாயம்
ஆஸ்திரேலிய அணி இந்த 27 ஓவரில் 7 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டிய கட்டாயத்தில் உள்ளது. இதனால் எந்த அணி இந்த தொடரை வெல்லும் அல்லது ஆட்டம் டிரா ஆகுமா என்று கேள்வி எழுந்துள்ளது. இப்படிப்பட்ட நிலையில் இந்திய அணி வீரர்களை தாக்கும் வகையில் ஆஸ்திரேலிய வீரர்கள் பவுலிங் செய்து வருகிறார்கள்.
பவுலிங்
இந்திய அணியின் டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்களை குறி வைத்து தாக்கும் வகையில் தொடர்ந்து ஆஸ்திரேலிய வீரர்கள் பவுலிங் செய்து வருகிறார்கள். தலையை குறி வைத்து அடுத்தடுத்த பீமர், நெஞ்சை குறி வைத்து பவுன்சர் என்று ஆஸ்திரேலிய பவுலர்கள் மோசமான யுக்தியை கையில் எடுத்துள்ளனர். அதிலும் புஜாராவை காலி செய்ய வேண்டும் என்றே ஹெல்மெட்டை குறி வைத்து ஆஸி. பவுலர்கள் தாக்கினார்கள்.
மோசமான ஆட்டம்
புஜாரா விக்கெட்டை எடுக்க முடியவில்லை என்றால் அவரை தாக்குங்கள் என்று ஷேன் வார்னே போன்ற முன்னாள் வீரர்கள் சொல்லும் அளவிற்க்கு ஆஸ்திரேலிய அணி கடும் விரக்தியில் உள்ளது. இதுவரை கப்பா மைதானத்தில் ஆஸ்திரேலியா தோல்வி அடைந்ததே இல்லை. இன்று அந்த வரலாறு மாற வாய்ப்புள்ளது.
வரலாறு
இந்திய அணி வெற்றிபெற்றுவிட கூடாது என்பதால் தற்போது வீரர்களை தாக்கி வீழ்த்தும் வித்தையை ஆஸ்திரேலிய அணி கையில் எடுத்துள்ளது. இதனால்தான் இன்று புஜாரா இரண்டு முறை காயம் அடைந்தார், ரஹானே ஒருமுறையும், பண்ட் ஒருமுறையும் காயம் அடைந்தார்.
போராட்டம்
ஆனால் இவ்வளவு காயங்களையும் மீறி இந்திய அணி தொடர்ந்து களத்தில் போராடி வருகிறது. இந்த போட்டியில் முடிவு எப்படி இருந்தாலும் ஆட்ட ரீதியாக இந்தியா எப்போதோ வென்றுவிட்டது என்றுதான் கூற வேண்டும். இந்திய அணியின் மிகசிறந்த டெஸ்ட் அணிகளில் ஒன்றாக இப்போது இருக்கும் அணி கண்டிப்பாக பார்க்கப்படும்.