தமிழ்நாடு
நடந்து முடிந்த சையது முஷ்டாக் கோப்பையில் தமிழக வீரர்கள் மிகவும் சிறப்பாக ஆடினார்கள். அதிலும் லீக் ஆட்டங்களில் ஜெகதீசன் மிகவும் சிறப்பாக ஆடினார். ஒன் டவுன் பேட்ஸ்மேனான இவர் தமிழக அணியின் வெற்றிக்கு ஒவ்வொரு போட்டியிலும் பெரிய அளவில் உதவினார்.
வீரர்கள்
இன்னொரு பக்கம் ஆங்கர் பேட்ஸ்மேன் பாபா அபராஜித் அமைதியாக களத்தில் உறுதியாக நின்று ஒவ்வொரு முறையும் தமிழக அணியின் வெற்றிக்கு உதவினார். தமிழக அணி பல போட்டிகளில் சரிவை சந்திப்பதில் இருந்து காப்பாற்றியவர் பாபா அபராஜித்தான்.
திறமை
இது போக இன்னொரு பக்கம் தமிழக வீரர் சாய் கிஷோர் மிகவும் சிறப்பாக பவுலிங் செய்தார். எல்லா போட்டியிலும் இவர் குறைந்தது 2 விக்கெட்டாவது எடுத்தார். 4 ஓவர்களை வீசி மிக குறைந்த ரன்களை கொடுத்த விக்கெட்டுகளை அள்ளினார்.
சிஎஸ்கே
இந்த மூன்று வீரர்களில் ஜெகதீசன் , சாய் கிஷோர் இரண்டு பேரும் சிஎஸ்கே வீரர்கள். அபராஜித் முன்னாள் சிஎஸ்கே வீரர். இவர்கள் சிஎஸ்கேவில் தொடர்ந்து தோனி மூலம் புறக்கணிக்கப்பட்ட வீரர்கள். இவ்வளவு திறமை இருந்தும் கூட தோனி இவர்களுக்கு ஒருமுறை கூட முறையான வாய்ப்பு கொடுத்தது இல்லை.
ஜெகதீசன்
ஜெகதீசனாவது இரண்டு போட்டிகளில் ஆடினார். சாய் கிஷோர் அந்த வாய்ப்பும் கூட கிடைக்காமல் கஷ்டப்பட்டு வருகிறார். கேட்டால் இவர்களுக்கு ஸ்பார்க் இல்லை என்று கூறி தோனி ஓரம்கட்டியுள்ளார். வலைப்பயிற்சியில் செயல்படுவதை பார்த்து இவர்களுக்கு தோனி வாய்ப்பு கொடுக்கவில்லை. ஆனால் தினேஷ் கார்த்திக் கேப்டன்சிக்கு கீழ் தமிழக அணியை வெற்றிபெற வைத்தது இவர்கள்தான்.
கேள்வி
இதனால் தோனி மீது விமர்சனங்கள் வைக்கப்பட்டு வருகிறது. இளம் வீரர்கள் இவ்வளவு திறமையாக இருக்கிறார்கள். இவர்களிடம் ஸ்பார்க்கை பார்க்கவில்லை என்றால் என்ன நியாயம். பிறகு எதற்கு தோனி கேப்டனாக இருக்க வேண்டும் என்று பலர் விமர்சனங்கள் வைத்து வருகிறார்கள்.