நீக்கப்பட்ட ரோகித்
அதில் முக்கியமான ஒன்று ரோகித் சர்மாவின் நீக்கம். அந்த டெஸ்டில் அவர் சேர்க்கப் படவில்லை. அது பெரிய ஆச்சரியத்தை அளித்தது என்பதைவிட, முக்கியமான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது. பல ஜாம்பவான்களும் இதற்கு கருத்து தெரிவித்திருந்தனர்.
பலர் கருத்து
ரோகித்தை தொடக்க வீரராக களமிறக்கலாம் என்று முன்னாள் கேப்டன் கங்குலி கருத்து தெரிவித்திருந்தார். ரோகித் இல்லாத அணியால் அசாருதீனும் அதிருப்தி அடைந்தார். அவர்கள் மட்டுமல்லாது, சேவாக், அக்தர் ஆகியோர், டெஸ்ட் போட்டி தொடங்குவதற்கு முன்னதாக, ரோகித்தை களத்தில் இறக்க வேண்டும் என்று கூறி இருந்தனர்.
முட்டாள்தனமானது
ரோகித் போன்ற ஒரு திறமையான வீரரை ஆடும் லெவனில் எடுக்காமல் இருப்பது முட்டாள் தனம். கண்டிப்பாக சேர்க்க வேண்டுமென்று, பாக். முன்னாள் வீரர் சோயிப் அக்தர் தெரிவித்திருந்தார். ஆனால் அவர்கள் சொன்னது எதுவும் நடக்கவில்லை. ரோகித் நீக்கப்பட்டிருந்தார்.
நெருக்கடியில் கோலி
இது பல கட்டங்களில் சர்ச்சையையும், பெரும் விவாதத்தையும் கிளப்பியது. டெஸ்டில் வெற்றி பெற்றுவிட்டாலும் ரோகித் விவகாரம் முற்று பெறவில்லை. தொடர்ந்து எதிர் கருத்துகள் வந்து கொண்டே இருந்ததால், ஒரு கட்டத்தில் விளக்கம் அளிக்க வேண்டிய கட்டாயத்துக்கு தள்ளப்பட்டார் கேப்டன் கோலி.
அணியின் காம்பினேஷன்
அவர் கூறியிருப்பதாவது: பொதுவாக அணியில் காம்பினேஷன் என்பது ரொம்ப முக்கியம். ஹனுமன் விஹாரி அருமையான பார்ட் டைம் பந்துவீச்சாளர். போட்டியின் இடையே சில ஓவர்களை வீசுவார். எனவே அவரை செலக்ட் செய்தோம்.
வழக்கமான ஒன்று
இது அனைவரும் விவாதித்து, அணியின் நலனுக்கு எது முக்கியமோ அதை தான் செய்திருக்கிறோம். ஆடும் லெவன் குறித்த விமர்சனங்கள் வருவது வழக்கமான ஒன்று. ஆனால், அதையே நினைத்து கொண்டிருக்க முடியாது. ஓர் அணி என்றால் அதன் தேவையும், அணியின் நலனுமே ரொம்ப முக்கியம் என்றார்.
அதிருப்தியில் ரசிகர்கள்
ஆனால் அவரது கருத்தை ரசிகர்கள் வேறு மாதிரியாக பார்க்க ஆரம்பித்து விட்டனர். அதாவது, கேப்டன் ரேசில், கோலி, ரோகித் இடையே ஒரு பந்தயம் ஓடிக் கொண்டிருக்கிறது. கிடைக்கும் வாய்ப்புகளின் போது எல்லாம் ரோகித்தை கழற்றிவிட்டுவிட்டு, அணியின் மீது கோலி பழி போடுகிறார். ரோகித் இந்திய அணியின் ஸ்டார் பேட்ஸ்மென். அவரை புதுவீரருடன் ஏன் ஒப்பிட்டு பேச வேண்டும் என்றும் கூறியிருக்கின்றனர்.