அரை இறுதி கூட போகவில்லை
ஆஸ்திரேலியாவில் இந்த ஆண்டு நடைபெறும் மகளிர் டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணி அரை இறுதிக்குக் கூட தகுதி பெறாமல் வெளியேறி விட்டது. ஆனாலும் சசிகலா சிறிவர்த்தனேவுக்கு இது மறக்க முடியாத தொடர். இலங்கை அணியின் கடைசிப் போட்டியில் பவுலிங்கில் பின்னி விட்டார். 4 விக்கெட்களை வீழ்த்திய அவருக்கு பிளேயர் ஆப் தி மேட்ச் பட்டமும் கிடைத்தது.
Smriti Mandhana, Shikha Pandey and Jemimah Rodrigues presented a signed #TeamIndia jersey to Sri Lanka legend Shashikala Siriwardene yesterday.
— Women's CricZone (@WomensCricZone) March 1, 2020
The Sri Lankan allrounder retires from all forms of cricket tomorrow.#T20WorldCup pic.twitter.com/GRC0LtNdBk
35 வயது சசிகலா
17 வருடமாக கிரிக்கெட் ஆடி வருபவர் சசிகலா. 35 வயதாகும் சசிகலா இந்தத் தொடருக்கு முன்பே தான் பங்கேற்கும் கடைசி தொடர் இதுதான் என்று கூறி விட்டார். அதன்படி தனது ஓய்வையும் அதிகாரப்பூர்வமாக அறிவித்து விட்டார். இலங்கை அணி இந்தத் தொடரில் ஒரு போட்டியிலும் ஜெயிக்கவில்லை. கடைசியாக வங்கதேசத்துக்கு எதிரான போட்டியில் மட்டுமே வென்றது. அந்த வெற்றிக்கும் சசிகலாவே காரணம் என்பதால் அந்த நிறைவோடு கிளம்பியுள்ளார் சசிகலா.
இந்திய அணியின் ஜெர்சி பரிசு
இந்தியா - இலங்கை போட்டியின்போது சசிகலாவை சந்தித்த இந்திய சூப்பர் ஸ்டார்கள் ஸ்மிருதி மந்தனா, ஜெமிமா ரோட்ரிக்ஸ், ஷிகா பாண்டே ஆகியோர் இணைந்து சசிகலாவை கெளரவித்துள்ளனர். அதாவது மூன்று பேரும், இந்திய வீராங்கனைகள் கையெழுத்திட்டிருந்த இந்திய கேப்டன் ஹர்மன்பிரீத் கெளரின் ஜெர்சியை சசிகலாவுக்கு நினைவுப் பரிசாக அளித்தனர். கூடவே முகம் நிறைய சிரித்தபடி ஒரு செல்பியும் எடுத்துக் கொண்டனர்.
ஆல் ரவுண்டர்
சசிகலா மொத்தம் 118 ஒரு நாள் போட்டிகள், 80 டி20 போட்டிகளில் ஆடியுள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 2000க்கும் மேலான ரன்கள், டி20 போட்டிகளில் 1000க்கும் மேலான ரன்கள் குவித்துள்ளார். ஒரு நாள் போட்டிகளில் 120க்கும் மேற்பட்ட விக்கெட்டுகளையும், டி 20 போட்டிகளில் 70க்கும் மேலான விக்கெட்களையும் சாய்த்துள்ளார்.