மும்பை இந்தியன்ஸ் அணி
அந்த வகையில் மும்பை இந்தியன்ஸ் அணியில் இருந்த குயிண்டன் டிக்காக், ட்ரெண்ட் போல்ட், ராகுல் சஹார் உள்ளிட்ட முக்கிய வீரர்களை வேறு அணிகள் ஏலம் எடுத்துவிட்டன. மும்பை அணி இனி புதுவித வீரர்கள் மற்றும் புதிய வியூகத்துடன் களமிறங்கவேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இந்நிலையில் அதுகுறித்து மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா பேசுவதற்கு இன்று வாய்ப்பு ஏற்பட்டது.
காட்டமான பதில்
இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 3 போட்டிகள் கொண்ட டி20 தொடர் நாளை தொடங்குவதால் அதற்காக பத்திரிகையாளர்களை சந்தித்தார். அப்போது இறுதியில் அவரிடம் மெகா ஏலம் குறித்து கேட்கப்பட்டது. சட்டென கோபமடைந்த ரோகித், ஐபிஎல் தொடர் குறித்து எனக்கு விருப்பமே இல்லை. அதுப்பற்றியெல்லாம் என்னிடம் கேட்காதீர்கள்.
ஆலோசனைக் கூட்டம்
வருடத்தில் வெறும் 2 மாதங்கள் மட்டுமே ஐபிஎல் தொடர் நடக்கிறது. ஆனால் அடுத்த 10 மாதங்களில் இந்திய அணிக்காக மட்டுமே விளையாடுகிறோம். எனவே இந்திய அணிக்காக என்ன செய்கிறோம், எப்படி விளையாடுகிறோம் என்பதே எனக்கு முக்கியம். நேற்று இந்திய வீரர்களுக்கும் தனியாக ஆலோசனை கூட்டம் நடத்தி கண்டிப்புடன் இதையே தான் கூறினேன் என கேப்டன் ரோகித் சர்மா தடாலடியாக கூறியுள்ளார்.
கொந்தளித்த ரசிகர்கள்
இந்த பதிலுக்கு ஐபிஎல் ரசிகர்கள் கொந்தளித்துள்ளனர். ஐபிஎல் தொடரில் ஒரு முன்னணி அணிக்கு கேப்டனாக இருந்து கொண்டு இப்படி அதனை பொருட்டாகவே மதிக்காமல் பேசுவதா?, 10 மாதங்களில் நீங்கள் எத்தனை போட்டிகளில் ஃபிட்டாக உள்ளீர்கள்?, ஆனால் ஐபிஎல்-ல் மட்டும் அனைத்து போட்டிகளிலும் விளையாடுகிறீர்கள் எப்படி? என சரமாரியாக கேள்விகளை அடுக்கி வருகின்றனர்.