இந்திய ப்ளேயிங் 11
இந்த போட்டிக்கான இந்திய அணியின் ப்ளேயிங் 11 இன்னும் உறுதி செய்யப்படவில்லை. கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ள கேப்டன் ரோகித் சர்மா போட்டியில் இருந்து விலகிவிட்டதால், ஜஸ்பிரித் பும்ரா வழிநடத்தவுள்ளார். துணைக்கேப்டனாக ரிஷப் பண்ட் செயல்படவுள்ளார்.
பிட்ச் நிலை என்ன
இந்த போட்டியில் பேட்டிங்கை விட பவுலிங்கில் இந்தியாவின் திட்டம் என்னவாக இருக்கும் என்பது தான் குழப்பமாக உள்ளது. எட்ஜ்பாஸ்டன் பிட்ச்-ல் வேகப்பந்துவீச்சாளர்களுக்கு சாதகமாக இருக்கும். அதற்காக தான் இங்கிலாந்து 5 வேகப்பந்துவீச்சாளர்களுடன் களமிறங்குகிறது. ஆனால் இந்தியாவின் பலமே ஸ்பின்னர்கள் தான்.
இந்தியாவின் வியூகம்
எனவே இப்போட்டியில் இந்திய அணி 3 வேகப்பந்துவீச்சாளர் + 2 ஸ்பின்னர்களுடன் ஆடுமா? அல்லது ஒரே ஒரு ஸ்பின்னரை மட்டும் பயன்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது. கடந்த 4 போட்டியிலும் இந்தியா ஒரே ஒரு ஸ்பின்னராக ஜடேஜாவை மட்டுமே பயன்படுத்தியது. அஸ்வின் புறக்கணிக்கப்பட்டார்.
டிராவிட்டின் திட்டம்
இந்நிலையில் தற்போது ராகுல் டிராவிட் பயிற்சியாளாராக இருப்பதால் திட்டம் மாற்றப்பட்டுள்ளது. அதாவது ரவிச்சந்திரன் அஸ்வின் - ஜடேஜா கூட்டணி மீண்டும் ஒன்று சேரவுள்ளதாக, அணி வட்டாரத்தில் இருந்து தகவல் கசிந்துள்ளது. இந்தியாவின் பல வெற்றிகளுக்கு காரணமாக இருந்த இவர்கள், இதிலும் சோபிப்பார்கள் என ராகுல் டிராவிட் முழு நம்பிக்கை வைத்துள்ளார்.