2 குழுக்கள்
டி20 உலகக்கோப்பை தொடரில் மொத்தம் உள்ள 12 அணிகளையும் வகைப்படுத்தப்படும். அதாவது ஒவ்வொரு குழுவிற்கும் தலா 6 அணிகள் என 2 குழுக்கள் பிரிக்கப்படுகின்றன. இதில் குரூப் ஏ- வில் இங்கிலாந்து, தென்னாப்பிரிக்க, ஆஸ்திரேலியா, வெஸ்ட் இண்டீஸ், வங்கதேசம், இலங்கை அணிகள் விளையாடுகின்றன. குரூப் பி பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான், நமிபியா, ஸ்காட்லாந்து அணிகள் இடம்பெற்றுள்ளன.
ஆட்ட முறைகள்
இந்த இரண்டு குழுக்களின் போட்டிகள் முடிவில், ஒவ்வொரு குழுவிலும் முதல் இரண்டு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிப்போட்டிக்கு முன்னேறும். முதல் இரண்டு இடங்களை பிடிக்க வேண்டும் என்றால் குறைந்தது 3 வெற்றிகளை பெற்றிருக்க வேண்டும். அந்தவகையில் இந்திய அணி தனக்குள்ள 5 ஆட்டங்களில் முதல் தோல்வியை சந்தித்து விட்டது. இன்னும் 4 ஆட்டங்கள் உள்ளன.
வாய்ப்பு
இந்தியாவுக்கு இன்னும், நியூசிலாந்து, நமிபியா, ஆஃப்கானிஸ்தான், ஸ்காட்கலாந்து அணிகளுடன் போட்டியுள்ளது. இதில் நியூசிலாந்து உடனான போட்டியில் இந்திய அணி கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும். இந்திய அணிக்கு நியூசிலாந்தை தவிர்த்து மற்ற 3 அணிகளுமே வெற்றி வாய்ப்பு அதிகம். சுலபமாக 3 வெற்றி கிடைத்துவிடும். ஆனால் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கும் அந்த 3 அணிகள் சுலபமானது தான். ஒருவேளை பாகிஸ்தான் அந்த 3 அணிகளையும் வீழ்த்திவிட்டால் 4 வெற்றிகளுடன் முதலிடம் பிடிக்கும்.
நியூசிலாந்து
ஒருவேளை இந்திய அணியை நியூசிலாந்து வீழ்த்திவிட்டால், மற்ற 3 அணிகளையும் சுலபமாக வீழ்த்திவிடும். இதனால் நியூசிலாந்து அணியும் 4 வெற்றிகளுடன் 2வது இடத்திற்கு சென்றுவிடும். அதன்பின்னர் 3 வெற்றி பெற்றும் இந்திய அணிக்கு பலனளில்லை. எனவே பெரும் அணிகளான பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்தை வீழ்த்தியே ஆக வேண்டும். இதில் பாகிஸ்தானிடம் தோல்வி வந்துவிட்டது. எனவே அடுத்ததாக நியூசிலாந்தை வீழ்த்தினால் மட்டுமே இந்திய அணியின் அரையிறுதிப்போட்டி பிரகாசமாகும்.