For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

"நம்ம முதலாளி.. நல்ல முதலாளி"... ஆஸ்திரேலியா மேட்ச் பார்க்க லீவு விட்ட சந்திரசேகர ராவ்!

By Mayura Akilan

ஹைதராபாத்: உலக கோப்பையில், இந்தியா-ஆஸ்திரேலியா இடையேயான அரையிறுதி போட்டியை மாணவர்கள் கண்டுகளிக்க வசதியாக, தெலங்கானா மாநில பள்ளி, கல்லூரிகளுக்கு, முதல்வர் சந்திரசேகர ராவ் விடுமுறை அறிவித்துள்ளார். அவரது இந்த அறிவிப்பு தெலங்கானா ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

Telangana CM KCR Declared Holiday For India vs Australia World Cup Semi-Final

உலக கோப்பை அரையிறுதி போட்டிகள் நடைபெற்று வருகின்றன. இந்தியா-ஆஸ்திரேலியா இடையே இன்று சிட்னியில், காலை 9 மணிக்கு போட்டி தொடங்கியுள்ளதால் ஏராளமானோர் ஏதாவது ஒரு காரணத்தை சொல்லி விடுமுறை எடுத்து டிவி முன்பு அமர்ந்து விட்டனர்.

கிரிக்கெட் ரசிகரான தெலங்கானா முதல்வர் சந்திரசேகரராவ், மாணவர்களே நீங்க லீவ் போட வேண்டாம்... நாங்களே லீவ் தருகிறோம் என்று அறிவித்து அவர்களின் வயிற்றில் பாலை வார்த்துள்ளார். இதுகுறித்த சுற்றறிக்கை நேற்றிரவே வெளியானதான தகவல்கள் தெரிவிக்கின்றன.

நம்ம முதலாளி நல்ல முதலாளி.. என்று பாடாத குறையாக உற்சாகமடைந்துள்ள தெலங்கானா கிரிக்கெட் ரசிகர்கள்... சிப்ஸ், பிஸ்கட் சகிதமாக டிவி முன்பு அமர்ந்து போட்டியை ரசித்து வருகின்றனராம்.

Story first published: Thursday, March 26, 2015, 9:51 [IST]
Other articles published on Mar 26, 2015
English summary
Holiday declared in Telangana for the second semi-final match between India and Australia. The match will be played in Sydney on Thursday, March 25. Media reports claimed that Telangana Chief Minister K Chandrashekar Rao (KCR) on Wednesday announced that schools, colleges and offices will be shut on Thursday.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X