சௌதாம்ப்டன் : இந்திய இங்கிலாந்து அணிகளுக்கிடையேயான நான்காவது டெஸ்ட் போட்டியில் நான்காம் நாளான நேற்று இங்கிலாந்து அணி இந்திய அணியை 60 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி தொடரை வென்றது. இந்திய அணியின் முன்வரிசை தொடக்க வீரர்களும், பின்வரிசையில் ஆடிய ரிஷப் பண்ட், அஸ்வின், பண்டியா, இஷாந்த், பும்ரா என யாரும் ரன் குவிக்கவோ, மற்ற வீரருடன் கூட்டணி அமைக்கவோ ஒத்துழைக்கவில்லை.