மும்பை: ஐ.பி.எல். டி.20 கிாிக்கெட் போட்டிகளில் பங்கேற்கும் அணிகளில் ஒன்றான கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பங்குகளை விற்றதில் முறைகேடு இருப்பதாக அதன் பங்கு தாரரான ஷாருக்கானுக்கு அமலாகத்துறை இயக்குனரகம் மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது.
பாலிவுட் நடிகர் ஷாருக்கான் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் ஒரு பங்குதாரர் ஆவார். இவர் கடந்த 2008ம் ஆண்டு தனது அணியின் பங்குகளை மொாிஷியசைச் சோ்ந்த சீ ஐலாண்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்திற்கு குறைந்த மதிப்பீட்டில் விற்றதாக புகாா் எழுந்துள்ளது.
இந்த பாிமாற்றத்தில் அந்நிய செசலாவனி சட்டத்தை மீறி 100 கோடி °ருபாய் கை மாறியுள்ளது அமலாக்கத் துறை செய்த தணிக்கையில் தொிய வந்துள்ளது. இதையடுத்து ஷாருக்கான் தவிர,மொாிஷியசைச் சோ்ந்த சீ ஐலாண்ட் இன்வெஸ்ட்மென்ட் என்ற நிறுவனத்திற்கும் கை மாறிய பங்கு விபரங்களுடன் நோில் ஆஜராகுமாறு அமலாகக்கத் துறை நோட்டீஸ் கடந்த மே மாதம் நோட்டீஸ் அனுப்பியது.
அமலாக்கத்துறை அலுவலகத்தில் ஷாருக்கான் ஆஜராகவில்லை என்று தெரிகிறது. இந்த நிலையில் பங்கு விற்பனை தொடர்பாக நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்குமாறு அமலாக்கத்துறை மீண்டும் சம்மன் அனுப்பியுள்ளது. பங்கு முறைகேடு விவகாரத்தில் சிக்கியுள்ள கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு இதனால் சிக்கல் எழுந்துள்ளது.