நொய்டாவிலும் வீடு
ஜார்க்கண்ட் மாநிலத்தை பூர்வீகமாக கொண்ட தோனிக்கு உத்தரபிரதேச மாநிலம் நொய்டாவிலும் வீடு உள்ளது. அந்த வீட்டை, தோனி, விக்ரம் சிங் என்பவருக்கு வாடகைக்கு விட்டிருந்தார்.
மாயமான டிவி
வீடு பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. விக்ரம் சிங் அங்கிருந்து வெளியேறியிருந்த சமயம், வீட்டில் இருந்த விலை உயர்ந்த எல்சிடி டிவி மாயமாகி இருக்கிறது.
போலீசார் விசாரணை
இதுதொடர்பாக, விக்ரம் சிங், நொய்டா போலீசில் புகாரளித்தார். ஆனால், எழுத்துப்பூர்வமாக புகார் எதுவும் அளிக்கப்படவில்லை. அதை தொடர்ந்து, இன்ஸ்பெக்டர் பிரசாந்த் கபில், விசாரணையை துவக்கியுள்ளார்.
விரைவில் கைது
வீடு பராமரிப்பு பணியில் இருந்தவர்களில் யாராவது ஒருவர் தான் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்க முடியும். எனவே... குற்றவாளியை விரைவில் கைது செய்துவிடுவோம் என்று இன்ஸ்பெக்டர் பிரசாந்த் கபில் தெரிவித்துள்ளார்.
ரசிகர்கள் கவலை
காய்ச்சலால் அவதிப்பட்டு வரும் தோனி, கடந்த சில போட்டிகளில் பங்கேற்காமல் இருந்தார். அதனால் அவரது ரசிகர்கள் கவலையில் இருந்தனர். தற்போது தோனி வீட்டில் திருட்டு என்ற செய்தி அவர்களுக்கு மேலும் வருத்தத்தை அதிகரிக்க செய்துள்ளது.