4வது டெஸ்ட் போட்டி
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4வது மற்றும் இறுதி டெஸ்ட் போட்டி துவங்கி நடைபெற்று வருகிறது. முன்னதாக நடந்து முடிந்துள்ள 3 டெஸ்ட் போட்டிகளில் தலா ஒரு வெற்றியும் ஒரு டிராவும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணிகள் செய்துள்ளன. இந்நிலையில் இந்த போட்டி வெற்றியை தீர்மானிக்கும் போட்டியாக அமைந்துள்ளது.
இந்தியா 290 ரன்கள்
இருவரும் அடுத்தடுத்து தங்களது அரைசதத்தை அடித்துள்ளனர். இந்நிலையில் 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு இந்திய அணி 290 ரன்களை அடித்துள்ளது. வாஷிங்டன் சுந்தர் 50 ரன்களும் ஷர்துல் தாக்கூர் 54 ரன்களும் அடித்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இவர்களின் பார்ட்னர்ஷிப்பில் இந்திய அணி அதிரடியாக ரன்களை குவித்து வருகிறது.
6 விக்கெட்டில் அதிக ரன்கள்
இந்நிலையில் பிரிஸ்பேனில் இதுவரை இந்திய அணி ஆடியுள்ள போட்டிகளில் 7வது விக்கெட்டிற்கு முந்தைய பார்ட்னர்ஷிப்பில் அதிகமான ரன்களை அடித்துள்ளது இதுவே முதல்முறை. இந்த பார்ட்னர்ஷிப் தொடரும் பட்சத்தில் இந்திய அணியின் வெற்றி வாய்ப்பு அல்லது டிரா செய்யும் வாய்ப்பு அதிகமாக காணப்படுகிறது.
வாஷிங்டன் சுந்தர் அதிரடி
இந்த போட்டியின்மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் தனது முதல் டெஸ்ட் போட்டியில் ஆடியுள்ள வாஷிங்டன் சுந்தர் 3 விக்கெட்டுகளை எடுத்து அனைவரையும் ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கியுள்ள நிலையில் தற்போது 50 ரன்களையும் குவித்துள்ளது மேலும் அதிகபட்ச ஆச்சர்யத்தை உருவாக்கியுள்ளது.