பெரிய தலைவலி
அவர் மேலும் கூறியதாவது: ஸ்டீவ் ஸ்மித்தை எப்படி அவுட் ஆக்குவது என்பது தான் இங்கிலாந்துக்கு இருக்கும் மிகப் பெரிய தலைவலி. 5க்கு பூஜ்யம் என்ற கணக்கில் ஆஸி. வெல்லும்.
தோல்வியால் நொறுக்கம்
முதல் டெஸ்ட்டில் இங்கிலாந்து தோல்வி கண்டால் விரைவில் உடைந்து நொறுங்கி விடுவார்கள் என்று இந்தத் தொடர் தொடங்கும் முன்பே கூறினேன். இங்கிலாந்து டெஸ்ட் அணியில் 4 ஒருநாள் வீரர்கள் உள்ளனர்.
அழுத்தம் தேவையில்லை
ஆனாலும் ஒருநாள் ஆடி ஆட்டத்தை காப்பாற்ற முடியவில்லை. ஸ்டீவ் ஸ்மித்திற்கு சரியான லெந்தில் வீச முடியவில்லை. 2வது டெஸ்ட் போட்டியில் எந்த அழுத்தத்துக்கும் இடம் கொடுக்காமல் இங்கிலாந்து அணியை தேர்வு செய்ய வேண்டும்.
நானாக இருந்தால் வேறு
ஒரு வேளை இங்கிலாந்து அணிக்கான வீரர்கள் தேர்வில் நான் இருந்தால் எனது செலக்ஷனே வேறு. ஆட்டத்துக்கு எந்த ஸ்பின்னரும் தேவையில்லை என்று முடிவெடுப்பேன். சாம் கரன், ஜோப்ரா ஆர்ச்சரைத்தான் ஆடும் லெவனில் தேர்வு செய்வேன் என்றார்.