பாம்புக்கு ரெடியான பங்களா
18வது ஓவரில் விஜய் சங்கர், நான்கு பந்துகளில் எந்த ரன்னும் எடுக்காத நிலையில், நாமதான் ஜெயிக்க போறோம். பாம்பு டான்ஸ் ஆடுவதற்கு தயாராக வேண்டும் என்று வங்கதேச வீரர்கள் மனதில் குதூகலமாக இருந்தது.
அதிரடி சிக்சர்கள்
19வது ஓவரில் தினேஷ் கார்த்திக் வந்தார். அந்த ஓவரில், இரண்டு சிக்சர், இரண்டு பவுண்டரிகள் என, 22 ரன்கள் எடுத்தார். கடைசி ஓவரில், 12 ரன்கள் தேவை என்று இருந்தது. அது கடைசி பாலில், 5 ரன்கள் எடுத்தால் வெற்றி, பவுண்டரி போனால் டை ஆகும் நிலை இருந்தது.
8 பாலில் 29 ரன்கள்
கண்ணா, கடைசி பால் சிக்சர் பார்க்கிறியா என்று, தினேஷ் கார்த்திக் சிக்சர் அடிக்க, இந்தியா திரில் வெற்றி பெற்றது. 6, 4, 6, 0, 2, 4, 1, 6 என, 8 பந்துகளை சந்தித்த தினேஷ் கார்த்திக், 29 ரன்கள் எடுத்தார்.
அடங்கிய பாம்பு டான்ஸ்
பாம்பு டான்ஸ் ஆடுவதற்கு தயாராக இருந்த வங்கதேச வீரர்களை, தனது அதிரடி ஆட்டத்தால் அடக்கினார் தினேஷ் கார்த்திக்.