டிரா ஆன 3வது டெஸ்ட்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 3வது போட்டி சிட்னி கிரிக்கெட் மைதானத்தில் நடந்து முடிந்துள்ள நிலையில், போட்டி டிரா ஆகியுள்ளது. 5 நாட்கள் தொடர்ந்து நடைபெற்றுள்ள இந்த போட்டியின் இரண்டாவது இன்னிங்சில் இந்திய வீரர்கள் சத்தீஸ்வர் புஜாரா, ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி மற்றும் ரவி அஸ்வின் ஆகியோர் மிகச்சிறந்த பங்களிப் அளித்துள்ளனர்.
பந்த் -புஜாரா பார்ட்னர்ஷிப்
இரண்டாவது இன்னிங்சில் 407 ரன்கள் என்ற கடினமான இலக்கை நோக்கி விளையாடியது இந்திய அணி. 100 ரன்களுக்கே 3 விக்கெட்டுகள் விழுந்த நிலையில் களமிறங்கிய ரிஷப் பந்த் மற்றும் சத்தீஸ்வர் புஜாரா சிறப்பாக விளையாடி 100 ரன்கள் பார்ட்னர்ஷிப்பை மேற்கொண்டனர்.
டிரா செய்ய போராட்டம்
பந்த் 97 ரன்களும் புஜாரா 77 ரன்களும் என அதிரடியாக விளையாடி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். இதையடுத்து ஆஸ்திரேலியாவிற்கு அதிகமாக இருந்த வெற்றி வாய்ப்பு படிப்படியாக குறைந்து போட்டி சமனாவதற்கான வாய்ப்பு அதிகரித்தது. இதையடுத்து ஹனுமா விஹாரி மற்றும் ரவி அஸ்வின் இருவரும் போட்டியை டிரா செய்ய பெரிதும் போராடி அதை சாத்தியப்படுத்தினர்.
சவுரவ் கங்குலி நம்பிக்கை
இந்நிலையில் இந்த தொடரை கைப்பற்றுவதற்கான நேரம் வந்துள்ளதாக பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி நம்பிக்கை தெரிவித்துள்ளார். மேலும் புஜாரா, பந்த், அஸ்வின் உள்ளிட்டவர்களின் முக்கியத்துவத்தை அனைவரும் உணர்ந்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
சாதாரண விஷயமில்லை
ஆஸ்திரேலியா போன்ற வலிமையான பௌலர்களுக்கு எதிராக 3வது பேட்ஸ்மேனாக களமிறங்கி விளையாடுவது சாதாரண விஷயமில்லை என்று புஜாராவிற்கு பாராட்டு தெரிவித்த கங்குலி இதேபோல 400 விக்கெட்டுகளை டெஸ்ட் போட்டிகளில் வீழ்த்துவது சாதாரணமில்லை என்று அஸ்வினுக்கும் பாராட்டு தெரிவித்துள்ளார்.