For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இப்பதானே ஐபிஎல் போச்சு.. அதுக்குள்ள அடுத்த அதிர்ச்சியா..கிரிக்கெட் ரசிகர்களுக்கு கிடைத்த ஷாக் நியூஸ்

சென்னை: ஐபிஎல்-ஐ தொடர் பாதியில் நிறுத்தப்பட்டுள்ள அதிர்ச்சியில் இருந்தே இன்னும் தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் மீளாத நிலையில் அதற்குள் அடுத்த அதிர்ச்சி செய்தி கிடைத்துள்ளது.

Recommended Video

IPL 2021க்கு UAE! 30 Daysல் நடத்த BCCI திட்டம்

ஐபிஎல் கிரிக்கெட் தொடர் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பாதியில் நிறுத்தபட்டது. இதனையடுத்து தமிழக கிரிக்கெட் ரசிகர்கள் டிஎன்பிஎல் தொடரின் பக்கம் பார்வையை திருப்பியுள்ளனர்.

ஐபிஎல்-க்கு அந்த இடம் மட்டும் வேணாம்.. பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறிய அட்வைஸ்..சிந்திக்குமா பிசிசிஐஐபிஎல்-க்கு அந்த இடம் மட்டும் வேணாம்.. பாகிஸ்தான் முன்னாள் வீரர் கூறிய அட்வைஸ்..சிந்திக்குமா பிசிசிஐ

இந்நிலையில் டிஎன்பிஎல் தொடருக்காக ஆவலுடன் காத்திருந்த அவர்களுக்கு அந்த தொடர் ஒத்திவைக்கப்படும் செய்தி கிடைத்துள்ளது.

டிஎன்பிஎல் தொடர்

டிஎன்பிஎல் தொடர்

தமிழகத்தின் புகழ்பெற்ற கிரிக்கெட் தொடரான டிஎல்பிஎல் டி20 கிரிக்கெட், 4 ஆண்டுகளாக சிறப்பாக நடைபெற்று வந்தது. கடந்த ஆண்டிற்கான ( 2020) போட்டிகள் ஜூன் 10 முதல் ஜூலை 12 வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனா ஊரடங்கு காரணமாக ஒத்துவைக்கப்பட்டது.

இந்தாண்டு திட்டம்

இந்தாண்டு திட்டம்

இதனையடுத்து இந்தாண்டு தொடருக்கான அட்டவணை கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. அதன்படி வரும் ஜூன் 4 டிஎன்பிஎல் தொடரை தொடங்கி ஜூலை 4 வரை போட்டிகளை நடத்தப்படும் என கூறப்பட்டது. மே.7ம் தேதி ஏலம் நடைபெறும் எனவும் கூறப்பட்டது. திருநெல்வேலி, திண்டுக்கல், சேலம், கோவை நகரங்களில் உள்ள மைதானங்களில் போட்டிகள் நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் சேலம், கோவை மைதாங்களில் முதல் முறையாக டி.என்.பி.எல் போட்டிகள் நடத்தப்படவுள்ளன.

போட்டிகள் ஒத்திவைப்பு

போட்டிகள் ஒத்திவைப்பு

இந்நிலையில் கொரோனா காரணமாக இந்தாண்டுக்கான தொடரையும் ஒத்திவைக்கப்படுவதாக டிஎன்பிஎல் கவுன்சில் அறிவித்துள்ளது. இதுகுறித்து பேசிய டிஎன்பிஎல் தலைமை செயல் அதிகாரி பிரசன்ன கண்ணன், தமிழகத்தில் தற்போது ஊரடங்கு போடப்பட்டுள்ளது. எனவே தளர்வுகள் அறிவிக்கப்படுகிறதோ அப்போதுதான் டிஎன்பிஎல் போட்டி நடத்துவது குறித்து ஆலோசிக்கப்படும்.

ஆலோசனை

ஆலோசனை

நாங்கள் தமிழகத்தில் உள்ள நிலைமையை கண்காணித்து வருகிறோம். மாநில அரசுடன் விரைவில் பேச்சுவார்த்தை நடத்தி, அதன்பிறகு போட்டிகளை நடத்துவது குறித்து முடிவெடுப்போம். எங்களால் எப்போது ஊரடங்கு தளர்வுகள் கிடைக்கும் கூற முடியாது. எனவே அது தெரிந்தவுடன் அடுத்த போட்டி அட்டவணை விவரங்களை வெளியிடுவோம்.

Story first published: Saturday, May 22, 2021, 19:01 [IST]
Other articles published on May 22, 2021
English summary
TNPL 2021 postponed due to lockdown restrictions
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X