சென்னை : இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் தான் இணைந்துள்ள புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் சிஎஸ்கே வீரர் சுரேஷ் ரெய்னா.
அந்த புகைப்படம் சிறப்பான தருணங்களை நினைவுபடுத்துவதாக அவர் தெரிவித்துள்ளார். அந்த புகைப்படத்தில் இருவரும் சிரித்தபடி எதையோ சாதித்த மனைநிலையில் உள்ளனர்.
கொரோனா வைரஸ் பாதிப்பால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி தள்ளிவைக்கப்பட்டுள்ள நிலையில், அதற்காக எம்எஸ் தோனி மற்றும் சுரேஷ் ரெய்னா இருவரும் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
தமிழ் இன்டஸ்ட்ரிக்குள் நுழைய தயாராகும் டேவிட் வார்னர்...
இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திர சிங் தோனியுடன் தான் இணைந்துள்ள புகைப்படத்தை தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார் பேட்ஸ்மேன் சுரேஷ் ரெய்னா. இருவரும் ஐபிஎல்லில் சிஎஸ்கே அணிக்காக விளையாடிவரும் நிலையில், இருவருமே அதன் துவக்கத்திற்காக தற்போது காத்திருக்கின்றனர். கொரோனாவால் ஐபிஎல் போட்டிகள் காலவரையின்றி ஒத்திவைக்கப்பட்டுள்ள நிலையில், அக்டோபர் மாதத்தில் நடத்தப்பட வாய்ப்புள்ளதாக கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில் சுரேஷ் ரெய்னா வெளியிட்டுள்ள இந்த புகைப்படத்தில் தோனி மற்றும் அவர் இருவரும் இணைந்து எதையோ சாதித்த மனநிலையில் சிரித்தபடியே மைதானத்தில் காட்சியளிக்கின்றனர். இந்த புகைப்படம் தன்னுடைய முக்கியமான தருணங்களை நினைவு படுத்துவதாக சுரேஷ் ரெய்னா தெரிவித்துள்ளார்.