For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

இந்தியாவுக்கு மிகப் பெரிய வெற்றி... 5 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்கவில்லை!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி குறித்து டுவிட்டரில் ரசிகர்கள் கருத்து

டெல்லி: இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான மூன்றாவது டெஸ்ட் போட்டி டிரென்ட்பிரிட்ஜ் மைதானத்தில் நடந்து வருகிறது. இந்தப் போட்டி குறித்து டுவிட்டரில் ரசிகர்கள் தெறிக்கவிட்ட சில டுவிட்களை பார்ப்போம்.

5 ஓவர் தாண்டிட்டாங்க

இந்திய அணி முதல் 5 ஓவர்களில் ஒரு விக்கெட் கூட இழக்காமல் இருந்துள்ளனர். இது இந்திய அணிக்கு கிடைத்துள்ள முதல் தார்மீக வெற்றி என்கிறார் இந்த குசும்பர்.

இரட்டை இலக்கத்தில் தவான்

இந்த இங்கிலாந்து தொடரில் ஷிகார் தவான் முதல் முறையாக இரட்டை இலக்க ரன்களை எட்டியுள்ளார் என்று கழுவி ஊத்துகிறார் இந்த ரசிகர்.

இந்திய அணியின் நம்பிக்கை

அஸ்வின் பேட்டிங் செய்ய இன்னும் பேடிங் செய்யவில்லை. இந்திய அணிக்கு நம்பிக்கையை பாராட்ட வேண்டும் என்று தெறிக்க விடுகிறார் இவர்.

மியூசிகல் சேரா

துவக்க ஆட்டக்காரருக்கான மியூசிகல் சேர் துவங்கியுள்ளது. மீண்டும் மாற்றம் செய்துள்ளனர். ராகுலும், தவானும் களமிறங்கியுள்ளனர் என்று நெத்தியடி அடித்துள்ளார் இந்த ரசிகர்.

Story first published: Saturday, August 18, 2018, 16:14 [IST]
Other articles published on Aug 18, 2018
English summary
Fans react in twitter on the india, england third test match.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X