2 வீரர்கள்
அதற்கு அவர், 2020ஆம் ஆண்டு சிஎஸ்கேக்கு எப்படி ருத்துராஜ் கிடைத்தாரோ, அதே போல் தற்போது எங்களுக்கு 2 இளம் வீரர்கள் நடப்பு சீசனில் நம்பிக்கை அளித்தனர். வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் சௌத்ரி முதலில் கொஞ்சம் சொதப்பினாலும், அவருக்கு தொடர்ந்து அணி நிர்வாகம் ஆதரவும் வாய்ப்பும் தந்தது.
முகேஷ் சௌத்ரி
அது எங்களுக்கு சீசன் முடிவில் நல்ல பலனை தந்தது. போட்டியில் விளையாட, விளையாட முகேஷ் சௌத்ரிக்கு வேகம் அதிகரித்தது. பந்தை எந்த இடத்தில் வீச வேண்டும், பந்தை ஸ்விங் செய்வது குறித்தும் நன்றாக கற்று கொண்டார். சிஎஸ்கே அணிக்கு எதிர்காலத்தில் நல்ல நம்பிக்கை அளிக்கும் வீரராக இருப்பார்.
ஷிம்ரஜித் சிங்
இதே போன்று ஷிம்ரஜித் சிங்கும் கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி கொண்டு தனது திறமையை நிரூபித்தார் என்று ஃபிளமிங் இவ்விரு வீரர்களையும் சென்னை அணி பாசிட்டிவாக கூறினார். அடுத்த சீசனில் தீபக் சாஹர், மதிஷா பிரதன்னா, ஜடேஜா ஆகியோர் திரும்பி விடுவார்கள் என்பதால் சிஎஸ்கேவின் பலம் அதிகரிக்கும்.
சிஎஸ்கே அடுத்த ஆண்டு
ஆனால் சிஎஸ்கே அணியிடம் 2 குறைகள் உள்ளன. நடுவரிசையில் பேட்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. சிவம் துபே தொடர்ந்து ரன் சேர்க்கவில்லை, ராபின் உத்தப்பாவும் ஏமாற்றினார், ராயுடுவும் அடுத்த ஆண்டு விளையாடுவாரா என தெரியவில்லை. இதனால் ஒரு வெளிநாட்டு ஆல்ரவுண்டர், இல்லை நல்ல பேட்ஸ்மேன்களை சிஎஸ்கே அணி அடுத்த ஆண்டு ஏலத்தில் எடுக்க வேண்டும்.