இங்கிலாந்து அணி
கொரோனா வைரஸ் காரணமாக சர்வதேச கிரிக்கெட் போட்டிகள் நடக்காமல் உள்ளது. இங்கிலாந்து அணி மட்டுமே முதல் அணியாக தொடர்ந்து இரண்டு நாடுகளுடன் கிரிக்கெட் தொடரில் விளையாட தயார் ஆகி வருகிறது. வெஸ்ட் இண்டீஸ் உடனான தொடர் இன்னும் சில நாட்களில் தொடங்க உள்ளது.
நோய் பரப்பும் கருவி
இந்த நிலையில், கிரிக்கெட் பந்து இயற்கையாகவே நோய் பரப்பும் கருவி என குறிப்பிட்டுள்ளார் பிரதமர் போரிஸ் ஜான்சன். அவரது கருத்து கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் சலசலப்பை உண்டாக்கி உள்ளது. கூடைப்பந்து, கால்பந்து ஆகியவற்றுக்கு அனுமதி அளித்த நிலையில் கிரிக்கெட்டுக்கு மட்டும் தடையா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
கிரிக்கெட்டில் உள்ள பிரச்சனை
போரிஸ் ஜான்சன் கூறுகையில், "கிரிக்கெட்டில் உள்ள பிரச்சனை என்னவென்றால் அதன் பந்து இயற்கையாகவே நோயை பரப்பும் கருவி. எந்த அளவுக்கு வேண்டுமானாலும் அது இருக்கும். அதை பல முறை நம் விஞ்ஞான நண்பர்களிடம் கேட்டு உறுதி செய்துள்ளோம்" என்றார்.
குழப்பம்
இதில் மற்றொரு குழப்பமும் உள்ளது. இங்கிலாந்து கிரிக்கெட் அணி இன்னும் இரு வாரங்களில் வெஸ்ட் இண்டீஸ் அணியுடன் டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. இரு அணிகளும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு உள்ளனர். இந்த நிலையில், போரிஸ் ஜான்சன் இந்த அறிவிப்பை வெளியிட்டு குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளார்.
அமெச்சூர் கிரிக்கெட்
சிலர் கிளப் கிரிக்கெட் மற்றும் அமெச்சூர் கிரிக்கெட் விளையாடத் தான் தடை தொடர்கிறது. சர்வதேச போட்டிகள் மற்றும் மாநில அளவிலான கிரிக்கெட் ஆட தடை இல்லை எனவும் கூறி வருகின்றனர். எனவே, இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் எந்த சிக்கலும் இன்றி நடக்கும் என கூறுகின்றனர்.
கடும் விமர்சனம்
முன்னாள் இங்கிலாந்து அணி கேப்டன் மைக்கேல் வாஹன். மிக வெளிப்படையாக அமெச்சூர் கிரிக்கெட்டுக்கு தடை விதிக்கப்பட்டு இருப்பதை "இது முற்றிலும் அறிவு இல்லாத முடிவு" என விமர்சனம் செய்துள்ளார். விரைவில் தடையை நீக்க வேண்டும் எனவும் கூறி உள்ளார்.