For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ஒரு அம்பயருக்கு பந்தால் வந்த மரணம்..! சோகத்தில் மூழ்கிய உலக கிரிக்கெட் அரங்கம்

லண்டன்: இங்கிலாந்தில் கிரிக்கெட் பந்து தாக்கியதில் நடுவர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

பெம்போக்ஷைரில் உள்ள ஹன்டல்டன் பகுதியை சேர்ந்தவர் ஜான் வில்லியம்ஸ். அவருக்கு வயது 80. பெம்ப்ரோக் - நார்பெத் அணிகளுக்கு இடையே ஜூலை 13ம் தேதி நடைபெற்ற 2வது டிவிஷன் கவுண்ட்டி போட்டியில் நடுவராக செயல்பட்டார்.

Umpire john williams dies weeks after being hit by ball

போட்டியின் போது ஜான் வில்லியம்ஸ் தலையில் பந்து பலமாக தாக்கியது. வலி தாங்க முடியாத அவர், மைதானத்திலேயே சுருண்டு கீழே விழுந்தார். உடனடியாக அவர், அங்கிருந்து உடனடியாக வேல்ஸ் யுனிவர்சிட்டி மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். கோமா நிலைக்கு சென்ற ஜானுக்கு மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்தனர்.

இதன் பின் ஆகஸ்ட் 1ம் தேதி அவரை ஹவர்போர்டில் உள்ள மற்றொரு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவருக்கு மேல்சிகிச்சைக்காக அளிக்கப்பட்டது. ஆனால், 2 வார கால சிகிச்சைக்கு பின் உடல் நிலையில் எந்த முன்னேற்றம் இன்றி ஜான் வில்லியம்ஸ் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்த ஜான் வில்லியம்ஜ் கிரிக்கெட்டிற்காக வாழ்நாளில் அதிக நேரங்களை செலவிட்டுள்ளார். கிரிக்கெட்டில் அதிக ஆர்வம் கொண்ட அவரின் மறைவிற்கு உள்ளூர் மக்கள், கிரிக்கெட் வீரர்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.

Story first published: Saturday, August 17, 2019, 9:39 [IST]
Other articles published on Aug 17, 2019
English summary
Umpire John Williams dies weeks after being hit by ball.
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X