கிரிக்கெட் போட்டிகள்
கொரோனா முடிவடைந்த பின்னர்தான் போட்டிகள் தொடங்கப் போகின்றன. ஆனாலும் கூட இந்த பாதிப்பு நீண்ட காலத்திற்குத் தொடரக் கூடிய வாய்ப்புகள் உள்ளதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் ஆலோசனைகளில் இறங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக அம்பயர்களின் பாதுகாப்பு தொடர்பான முடிவை எடுத்துள்ளது.
நிராகரிக்க உரிமை
அதன்படி போட்டிகளின் வீரர்கள் தொப்பி உள்ளிட்டவற்றைக் கொடுத்தால் ஏற்பதும், நிராகரிப்பதும் அம்பயர்களின் விருப்பத்திற்கு விடப்படுகிறது. அவர்கள் விரும்பவில்லை என்றால் நிராகரிக்கலாம். அதற்குப் பகுதிகளாக பவுண்டரி லைன் பகுதியில் தங்களது தொப்பி, கண்ணாடி, ஸ்வெட்டர்களை பவுலர்கள் வைத்துக் கொள்ளலாம்.
கிளவுஸ் போடக் கூடாது
அதேசமயம், அம்பயர்களுக்கு கிளவுஸ் பயன்படுத்த அனுமதி கிடையாது. காரணம், பந்தை பரிசோதிக்கும்போது கிளவுஸ் இடையூறாக இருக்கும் என்பதால் அதற்கான அனுமதி தரப்படவில்லை. அதேசமயம், பந்து பார்வையாளர் பகுதிக்குப் போய் திரும்பி வரும்போது பந்தை தொட்டவருக்கு கொரோனா இருந்தால் அந்தப் பந்தை தொடும் அனைவருக்கும் அது பரவுமா என்ற அச்சமும் உள்ளது. இருப்பினும் இதுதொடர்பாக பரிசீலிக்கப்படவில்லை.
முன்னெச்சரிக்கை நடவடிக்கை
தற்போது உலகம் முழுவதும் விளையாட்டுப் போட்டிகள் தடைபட்டுள்ளன. கிரிக்கெட் போட்டிகளும் தடை பட்டுள்ளன. கொரோனா எப்போது ஓயும் என்றும் தெரியவில்லை. ஆனால் கொரோனா பரவல் மட்டுப்படும்போது லாக்டவுன் நீக்கப்பட்டால் கிரிக்கெட் போட்டிகளும் நடைபெறக் கூடிய வாய்ப்புகள் உள்ளன. எனவே இப்போதே முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.