சச்சினுக்கு புகழாரம்
இந்திய டிவி சேனல் ஒன்றுக்கு வாசிம் அக்ரம் அளித்துள்ள பேட்டியில் கூறியிருப்பதாவது: சச்சின் டெண்டுல்கர் மற்றும் விராட் கோஹ்லி ஆகிய இருவருமே பவுலர்களுக்கு சவாலானவர்கள்தான். சச்சின் விக்கெட்டை வீழ்த்துவது மிகவும் சிரமம்.
பயப்படும் வாசிம்
விராட் கோஹ்லியும் அனைத்து வகை கிரிக்கெட்டிலும் ஜொலிக்கிறார். விராட் கோஹ்லிக்கு என்னை பவுலிங் வீசச் சொன்னால் நான் சிரமமாகவே உணருவேன்.
நுணுக்கமான ஷாட்டுகள்
விராட் கோஹ்லி தன் திறமை மீது அதிக நம்பிக்கை வைத்துள்ளார். பேட்டிங் டெக்னிக்குகளும் சிறப்பாக உள்ளது. ரிவர்ஸ் ஸ்வீப் போன்ற ஷாட்டுகளை அவர் ஆடுவதில்லை. கிரிக்கெட்டிங் ஷாட்டுகளை மட்டுமே ஆடுகிறார். ஆனால், பேட்டின் நடு பகுதியில் பந்து படும் வகையில் அவர் சீராக ஆடுகிறார். இதனால்தான் சிறந்த பேட்ஸ்மேனாக தொடர முடிகிறது.
பலமானவர்
நடப்பு ஐபிஎல் தொடரில் மட்டும் கோஹ்லி 36 சிக்சர்கள் விளாசியுள்ளார். நான் அனைத்து வகை போட்டிகளிலும் மொத்தமே 50 பிளஸ் சிக்சர்கள்தான் அடித்திருந்தேன். அக்காலகட்டத்தில் சிக்சர் அடிப்பது மிகவும் அரிதானது. கோஹ்லி ஷாட்டின் பலத்தை இந்த சிக்சர்கள் பறைசாற்றுகின்றன.
மிஸ்டர் 360 டிகிரி
டிவில்லியர்ஸ் சிறந்த வீரர். எந்த சூழ்நிலையிலும், அணியை தனியாளாக நின்று கரைசேர்க்கும் வல்லமை உள்ளவர். 360 டிகிரி கோணத்திலும் ஷாட் அடிக்கும் திறமைசாலி டிவில்லியர்ஸ். வேகப்பந்து வீச்சாளர்களை மிக எளிமையாக கையாளுகிறார். ஸ்பின்னர்களையும் விட்டுவைப்பதில்லை.
ஒப்பிட முடியாது
அதேநேரம், கோஹ்லி மற்றும் டிவில்லியர்ஸ் இருவரையும் ஒப்பிடுவது சரியல்ல. இருவரும் வெவ்வேறு டெக்னிக் கொண்ட பேட்ஸ்மேன்கள். இருவருமே மேட்ச் வின்னர்கள். தனி நபராக அணியை காப்பாற்றும் திறமைசாலிகள். எனவேதான், இருவருமே உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேன்களாக விஸ்வரூபம் எடுத்துள்ளனர். இவ்வாறு வாசிம் அக்ரம் தெரிவித்துள்ளார்.