தொடர் வெற்றி
இதையடுத்து வெஸ்ட் இண்டீசுக்கு 468 ரன்கள் வெற்றி இலக்காக நிர்ணயிக்கப் பட்டது.ஆனால் இந்திய அணியின் அட்டாக் பவுலிங்கால் மளமளவென வெஸ்ட் இண்டீஸ் விக்கெட்கள் காலியாகின. 257 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா அபாரமாக வென்று, தொடரையும் கைப்பற்றி சாதித்தது.
ஏமாற்றிய ரசிகர்கள்
ஆனால், இந்த தொடரில் மிகப்பெரிய ஏமாற்றத்தை இந்திய அணி நிர்வாகம் சந்தித்தது. போட்டியை காண 4வது நாளில் ஐபிஎல் தலைவர் ராஜீவ் சுக்லா, வெஸ்ட் இண்டீஸ் சென்றிருக்கிறார். ஸ்டேடியத்தில் அந்த போட்டியை பார்க்க, மொத்தம் 50 பேர் கூட இல்லை என்று கூறியிருக்கிறார்.
50 பேர் தான் வந்தனர்
அவர் மேலும் கூறியதாவது: வெஸ்ட் இண்டீசில் கிரிக்கெட் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது. போட்டியின் 4வது நாளில், மொத்தம் 50 பேர் தான் பார்க்க வந்திருக்கின்றனர். இன்னும் சொல்லப்போனால் 50 பேர் கூட நேரில் பார்க்க வர வில்லை.
கூட்டமில்லை
இந்திய வம்சாவளியினர் அதிகம் வசிக்கும் வெஸ்ட் இண்டீசில், இந்திய அணி விளையாடும் போட்டிகளுக்கு கூட கூட்டம் வருவதில்லை என்பது வேதனை தருகிறது. சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் உடனே நடவடிக்கைகள் எடுக்கவில்லை என்றால், இனி வெஸ்ட் இண்டீசில் கிரிக்கெட் பார்க்க யாருமே வரமாட்டார்கள் என்றார்.
அதல பாதாளத்தில் கிரிக்கெட்
ஒரு காலத்தில், கிரிக்கெட்டின் ஜாம்பவான் என்றால் அது வெஸ்ட் இண்டீஸ் தான். எந்த வித வசதிகளும், தொழில்நுட்பங்கள் இல்லாத காலத்திலேயே கலக்கியவர்கள் அவர்கள். தற்போது கிரிக்கெட் விஷயத்தில் அதல பாதாளத்தில் உள்ளனர்.
ரசிகர்கள் வேண்டுகோள்
அந்நாட்டு அணி மோதும் பல போட்டிகளில், இதே நிலைமை தான் நிலவுகிறது. ஆட்டத்தை காண ஸ்டேடியத்துக்கு வருபவர்கள் சொற்பான அளவிலேயே இருக்கின்றனர். மைதானத்தில் நிரம்பி வழிந்த ரசிகர் கூட்டம், இன்று ஒட்டு மொத்தமாக காணாமலேயே போயிருக்கிறது. அதற்கான உண்மையான காரணத்தை வெஸ்ட் இண்டீஸ் நிர்வாகமும், ஐசிசியும் கண்டறிந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே கிரிக்கெட் ஜாம்பவான்களின் தற்போதைய வேண்டுகோள்.