சுதந்திர பறவை
இதன் பிறகு, இந்திய வங்கிகளிடமிருந்து கடன் வாங்கி, அதனை திருப்பி செலுத்தாமல் பல்லாயிர கோடி கணக்கில் மோசடி செய்த விஜய் மல்லையா தற்போது நாட்டை விட்டு வெளியேறி, இங்கிலாந்தில் வசித்து வருகிறார். அவரை நாடு கடத்த எடுக்கப்பட்ட முயற்சி தோல்வியை தழுவியது. அதன் பிறகு அவர் இங்கிலாந்தில் சுதந்திர பறவையாக திகழ்ந்து வருகிறார்.
பார்ட்டி நண்பர்கள்
விஜய் மல்லையாவுக்கும், கிறிஸ் கெயிலுக்கும் வயது வித்தியாசம் இருந்தாலும், அணியின் உரிமையாளர் என்ற நிலையையும் தாண்டி , இருவருக்கு இடையே அப்படி ஒரு நட்பு திகழ்ந்து இருந்தது. விஜய் மல்லைய்யாவின் கோவா பங்களாவில் தான் கிறிஸ் கெயில் தங்குவார். இருவரும் சேர்ந்து பார்ட்டி செய்தால் அவ்வளவு தான் அட்டகாசம் தாங்காது.
மீண்டும் சந்திப்பு
இந்த நிலையில், இங்கிலாந்து சென்றுள்ள கிறிஸ் கெயில், விஜய் மல்லையாவை சந்தித்து புகைப்படம் எடுத்து கொண்டார். இந்த சந்திப்பின் போது இருவரும் இந்தியாவின் ஐபிஎல் நாட்களில் அடித்த லூட்டிகள் குறித்து பேசினர். இது தொடர்பாக டிவிட்டரில் பதிவிட்டுள்ள விஜய் மல்லையா, தன்னுடைய நல்ல நண்பன் கிறிஸ் கெயிலை சந்தித்தது மகிழ்ச்சி அளிப்பதாக தெரிவித்தார்.
விஜய் மல்லைய்யாவுடன் சந்திப்பு
கிறிஸ் கெயிலை யுனிவர்சல் பாஸ் என்று பாராட்டிய விஜய் மல்லைய்யா, அவரை ஆர்சிபி அணிக்காக எடுத்த நாள் முதல் இருவரின் நட்பும் இன்று வரை தொடருவதாக கூறினார். இத்னிடையே, இங்கிலாந்து பிரதமர் போரிஸ் ஜான்சன் கலந்து கொண்ட அதே நிகழ்ச்சியில் தான் விஜய் மல்லைய்யாவும் பங்கேற்றுள்ளது புகைப்படம் மூலம் தெரியவந்துள்ளது. இந்தியாவில் தேடப்படும் மோசடி நபர் , இங்கிலாந்து பிரதமர் கலந்து கொண்ட நிகழ்ச்சியில் பங்கேற்று இருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது,