மும்பை:நிதாஹஸ் தொடர் முடிந்த பிறகு தமக்கு வந்த தொலைபேசி அழைப்புகளால் வாழ்க்கையே மாறியதாக விஜய் சங்கர் கூறி இருக்கிறார்.
உலக கோப்பை தொடருக்கான இந்திய அணி இன்னும் ஒரு சில தினங்களில் இங்கிலாந்து புறப்பட இருக்கிறது. அணியில் தினேஷ் கார்த்திக், விஜய் சங்கர் ஆகிய 2 தமிழக வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.
இந் நிலையில் விஜய் சங்கர் ஆங்கில நாளிதழ் ஒன்றுக்கு பேட்டியளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது: கடந்த ஆண்டு நடந்த நிதாஹஸ் தொடருக்கு பின் கடுமையான விமர்சனங்கள் எழுந்தன. அந்த தொடர் தான் என்னோட வாழ்க்கையையே மாற்றியது.
ஒரு வருடம் ஆனாலும் அதை என்னால் மறக்க முடியாது. போட்டி நடந்த அன்றைய நாள் மட்டும் 50 மீடியா நபர்களின் போன்கால் பேசியிருப்பேன். அவர்கள் அனைவரும் ஒரே கேள்வியைத்தான் கேட்டார்கள்.
ஆத்தாடி.. எம்புட்டு பணம்! ஜெயித்தாலும் பரிசு.. தோற்றாலும் பரிசு.. உலகக்கோப்பை கிரிக்கெட் ஜாக்பாட்!!
அதையேதான் சமூக வலைதளங்களிலும் பேசிகொண்டார்கள். ரொம்பவுமே கஷ்டமாக இருந்தது. அந்த சம்பவத்தில் வெளியே வந்துவிட வேண்டும் என்று நினைத்தேன். ஏன் என்றால் அந்த எனது பேட்டிங் பற்றி கடுமையாக விமர்சிக்கப்பட்டது. ஆனால் அப்போது நான் பவுலிங்கும் செய்திருந்தேன்.
அன்றைய சம்பவங்கள் அனைத்தும் எனக்கு பாடம். தோனி, கோலி, ரோகித் போன்ற வீரர்களிடம் இருந்து மோசமான சூழ்நிலைகளை எவ்வாறு கையாள்வது என கற்று கொள்ள நினைத்தேன் என்றார்.