எழுப்பப்பட்ட கேள்வி
காயத்தால் அவதிப்பட்ட விஜய் சங்கர் ஏன் கூல்டிரிங்ஸ் பாட்டிலை கொடுத்து அனுப்பியது? அணியில் வேறு யாரும் இல்லையா? என்று டுவிட்டரில் அவர் கேள்வியையும் கேட்டிருந்தார். அதன்பிறகு, விஜய் சங்கர் இந்தியா திரும்பினார்.
கிடைத்த அனுபவங்கள்
தற்போது, விஜய் சங்கர் டிஎன்பிஎல் போட்டிகளில் பிசியாக உள்ளார். இந்த தருணத்தில் உலக கோப்பை தொடர், அதில் கிடைத்த அனுபவங்கள் பற்றி கருத்துகளை வெளியிட்டு இருக்கிறார்.
வீரரின் கனவு
அவர் கூறியதாவது: இந்த உலக கோப்பை போட்டி தமக்கு சிறப்பான அனுபவத்தை கொடுத்திருக்கிறது. ஒவ்வொரு கிரிக்கெட் வீரருக்கும் இந்திய அணி சார்பாக உலக கோப்பையில் விளையாட வேண்டும் என்று கனவு இருக்கும்.
எனக்கு மகிழ்ச்சி
அந்த கனவு தனக்கு நிறைவேறியது. உலக கோப்பை தொடரில் நானும் ஓர் அங்கம் என்பது மகிழ்ச்சியே. ஆனால், உலக கோப்பையில் இருந்து வெளியேறியதை பிராக்டிகலாக எடுத்துக் கொண்டிருக்க வேண்டும்.
ரொம்ப வருத்தம்
அந்த வெளியேற்றத்தை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. மிகவும் வருத்தமாக இருந்தது. அதை ஏற்று கொள்ள முடியாமலும் இருந்தது. அரையிறுதியில் நியூசிலாந்திடம் இந்தியா தோற்றதை கண்டு வருந்தினேன். ஒரு வீரராக டி20, டெஸ்ட், ஒருநாள் என 3 வகை கிரிக்கெட் தொடர்களிலும் விளையாடுவதற்கு தயார் படுத்திக்கொள்ள வேண்டும் என்றார்.