பெங்களூரு: இந்திய கிரிக்கெட் அணிக்கு ஆகஸ்ட் 18ஆம் தேதி ஒரு மறக்கமுடியாத நாள் ஆகும். ஆம் 10 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய கிரிக்கெட் அணியில் இளம் வீரராக களமிறங்கினார் தற்போதைய இந்திய அணியின் கேப்டன் விராட் கோஹ்லி.
2008ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18ஆம் தேதி இலங்கைக்கு எதிராக நடைபெற்ற ஒருநாள் தொடரில் அறிமுகமானார் இளம்வீரர் விராட் கோஹ்லி. அதற்கு முன்பு அவரது தலைமையில் இந்திய யு19 அணி உலகக்கோப்பையை வென்றது குறிப்பிடத்தக்கது.
விருதுகள் :
தற்போது கோஹ்லி இங்கிலாந்து தொடரில் விளையாடி வருகிறார். இன்று நடைபெறும் மூன்றாவது டெஸ்டில் வெற்றி பெற்று தனது 10 வருட கிரிக்கெட் வாழ்க்கையில் மேலும் ஒரு வெற்றியை சேர்ப்பார் என்று நம்பலாம்.