வெற்றியே முக்கியம்
மீண்டும் கேப்டனாகப் பொறுப்பேற்பதில் மகிழ்ச்சி. ரஹானேவுக்கு மட்டுமல்ல எனக்கும் சேர்த்து, அணியில் உள்ள ஒட்டுமொத்த வீரர்களும் நம்பிக்கையின் அடிப்படையில் இயங்குகிறோம். அனைவரும் ஒரே இலக்குடன்தான் பயணிக்கிறோம், அது அணியின் வெற்றி மட்டுமே.
நல்ல புரிதல் உள்ளது
எனக்கும் ரஹானேவுக்கும் இடையே களத்துக்கு உள்ளேயும் வெளியேயும் நல்ல உறவு உள்ளது. இருவரும் பேட்டிங் செய்யும் போது, ஒருவரை ஒருவர் புரிந்துகொண்டு பேட்டிங் செய்வோம். மைதானத்துக்கு வெளியேயும் அதிகமாகப் பேசுவோம். எப்போதும் தொடர்பில் இருப்போம்.
நிறைய ஆலோசித்தோம்
ரஹானேவுக்கு அணியை வழிநடத்திச் செல்லக்கூடிய திறமை, தகுதி உள்ளது. ஆஸ்திரேலியாவில் போட்டி தொடங்கும் முன் என்னைத் தொடர்பு கொண்டு ஆலோசித்து தான் இந்திய அணியை வழிநடத்தினார். இருவரும் பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டோம்" என்றார்.
எந்த மோதலும் இல்லை
ஆஸ்திரேலிய மண்ணில் சிறப்பாக செயல்பட்ட ரஹானேவுக்கு ஆதரவாக பல வெளிநாட்டு வீரர்கள் கருத்துகள் தெரிவித்தனர். கோலி கேப்டன்ஷிப்பில் அவர் விளையாடுவது சுவாரஸ்யமாக இருக்கப் போகிறது என்று மோதல் ஏற்படுத்தும் தொனியில் பேசி வந்தனர். அனைத்துக்கும் தனது ஓபன் ஸ்டேட்மென்ட் மூலம் முற்றுப்புள்ளி வைத்துவிட்டார் கேப்டன் கோலி.