வெற்றிக்கு தீவிரம்
ஐபிஎல் 2021 தொடரின் இன்றைய போட்டி அகமதாபாத்தின் நரேந்திர மோடி மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இன்றைய போட்டியில் ஆர்சிபி மற்றும் டெல்லி கேபிடல்ஸ் அணிகள் மோதவுள்ளன. இரண்டாவது மற்றும் 3வது இடங்களில் உள்ள இந்த அணிகள் இன்றைய போட்டியில் வெற்றி பெற்று முதலிடத்தை பிடிக்க ஆர்வம் காட்டி வருகின்றன.
4 வெற்றிகள்
இந்த சீசனில் சிறப்பான துவக்கத்தை ஆர்சிபி அணி கொடுத்து வருகிறது. இதுவரை விளையாடியுள்ள 5 போட்டிகளில் சிஎஸ்கேவிற்கு எதிரான கடந்த போட்டியில் மட்டுமே தோல்வி கண்டுள்ளது. சிஎஸ்கேவிற்கு எதிரான போட்டியில் 69 ரன்களில் தோல்வி அடைந்தது ஆர்சிபி.
அணியின் சிறப்புக்கு காரணம்
ஆர்சிபி அணியில் உலகின் மிகசிறந்த இரண்டு வீரர்கள் விராட் கோலி மற்றும் ஏபி டீ வில்லியர்ஸ் உள்ளது அந்த அணியின் சிறப்புக்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. அவர்கள் இருவரும் கடந்த வருடங்களில் தங்களது அணியின் நம்பிக்கைக்கு அடிப்படையாக அமைந்துள்ளனர்.
தங்களுக்கு தாங்களே கோச்கள்
இதனிடையே, அவர்கள் இருவரும் சிறப்பான உலக தரத்திலான வீரர்கள் என்பதால் அவர்களுக்கு ஏற்ப தன்னுடைய கோச்சிங்கை மாற்றிக் கொண்டுள்ளதாகவும், ஆனால் அவர்கள் இருவருக்கும் கோச்சிங்கே தேவையில்லை என்றும் தங்களுக்கு தாங்களே அவர்கள் சிறந்த கோச்களாக இருப்பதாகவும் அணியின் தலைமை கோச் சைமன் காட்டிச் தெரிவித்துள்ளார்.
அசத்தும் விராட்
உலக தரத்திலான வீரராக இருந்தாலும் விராட் கோலி இன்னமும் கற்றுக் கொள்வதில் அதிகமாக ஆர்வம் காட்டி வருவதாகவும் காட்டிச் தெரிவித்துள்ளார். அவருடைய போட்டியை சிறப்பாக்கும் எந்த புதிய விஷயம் குறித்தும் அவர் கேட்டு அறிந்துக் கொள்வார் என்றும் அவர் மேலும் பாராட்டு தெரிவித்துள்ளார்