கோலி காட்டம்
கேப்டன் பொறுப்பிலிருந்து விலகியதும் விராட் கோலியின் ஆக்கோரஷம் இன்னும் அதிகமாகிவிட்டது. தீ போல் எதிரணி வீரர்களை சுட்டெரிக்கும் கோலி,எதிரணி கேப்டன் பெவுமாவை தொடர்ந்து வச்சு செய்தார். களத்தில் கோலி இப்படி நடப்பது வழக்கம் தான் என்றாலும், இது வழக்கத்திற்கு மாறாக இருந்ததாக ரசிகர்கள் சிலர் கருத்து தெரிவித்து இருந்தனர்
தேசிய கீதம்
இந்த நிலையில், நேற்றைய போட்டி தொடங்குவதற்கு முன் இரு நாடுகளின் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. அப்போது இந்திய வீரர்கள் அனைவரும் நேராக நின்று தேசிய கீதத்தை பாடி மரியாதை தந்தனர். ஆனால் விராட் கோலி மட்டும் CHEWING GUM ஐ வாயில் போட்டு மென்று கொண்டிருந்தது வீடியோவில் பிடிப்பட்டது
வலுக்கும் எதிர்ப்பு
இதனையடுத்து, இந்த வீடியோவை சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வரும் சிலர் விராட் கோலியை கடுமையாக விமர்சித்து வருகின்றனர். விராட் கோலி தேசிய கீதத்தை அவமானப்படுத்தியதாக கூறி, அவர் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளனர். ஆனால் நாட்டுப் பற்று மிக்க கிரிக்கெட் வீரராக விளங்கும் கோலி ஏன் இப்படி செய்தார் என்று தெரியவில்லை என்று அவரது ரசிகர்களும் தெரிவித்தனர்
பர்வேஷ் ரசூல்
இதே போன்று இந்திய அணிக்காக விளையாடிய முதல் காஷ்மீர் வீரரான பர்வேஷ் ரசூல், தேசிய கீதம் இசைத்த போது CHEWING GUM போட்டு வாயில் மென்றார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், அதன் பிறகு அவர் இந்திய அணிக்கே தேர்வு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.