லண்டன் : இந்திய அணியை மிகச்சிறப்பாக கேப்டன் விராட் கோலி உருவாக்கியுள்ளதாக முன்னாள் இங்கிலாந்து கேப்டன் நாசர் ஹூசைன் பாராட்டு தெரிவித்துள்ளார்.
விராட் கோலி இல்லாத நிலையிலும் ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் தொடரை இந்திய அணி சிறப்பாக வெற்றி கொண்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
முதல் போட்டியில் மோசமான தோல்வியை கண்டபோதிலும் டெஸ்ட் தொடரை இந்திய அணி வென்றுள்ளதையும் அவர் சுட்டிக் காட்டியுள்ளார்.
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான டெஸ்ட் தொடரை இந்திய அணி 2க்கு 1 என்ற கணக்கில் வெற்றி கொண்டுள்ள நிலையில், பல்வேறு தரப்பினரும் தொடர்ந்து பாராட்டு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் இங்கிலாந்து முன்னாள் கேப்டனும் தற்போதைய கிரிக்கெட் வர்ணனையாளருமான நாசர் ஹூசைன் இந்த வெற்றி குறித்து பாராட்டு தெரிவித்துள்ளார்.
கேப்டன் விராட் கோலி இந்திய அணியை வலிமையாக்கியுள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார். முதல் டெஸ்ட் போட்டியில் 36 ரன்களுக்கு ஆல்-அவுட்டான நிலையில், கோலி இல்லாத அணி தொடரை வென்றுள்ளதை அவர் சுட்டிக் காட்டியுள்ளார். காயம் காரணமாக பௌலர்கள் நீக்கப்பட்ட நிலையிலும் ஆஸ்திரேலியாவில் ஆஸ்திரேலியாவை இந்திய அணி வெற்றி கொண்டுள்ளதாக அவர் பாராட்டு தெரிவித்துள்ளார்.