ஆர்சிபியில் ஜோஷ் பிலிப்
ஆர்சிபி அணியில் விராட் கோலியின் தலைமையின்கீழ் இணைந்து விளையாடி வருகிறார் ஆஸ்திரேலிய விக்கெட் கீப்பர் மற்றும் பேட்ஸ்மேன் ஜோஷ் பிலிப். கடந்த ஐபிஎல் 2020 தொடரில் 5 போட்டிகளில் மட்டுமே விளையாடிய பிலிப் 78 ரன்களை எடுத்திருந்தார்.
ஆர்சிபியில் தக்கவைக்கப்பட்ட பிலிப்
இந்நிலையில் ஐபிஎல் 2021 தொடரிலும் அவர் ஆர்சிபி அணிக்காக தக்கவைக்கப்பட்டுள்ளார். அணியிலிருந்து ஆஸ்திரேலிய கேப்டன் ஆரோன் பின்ச் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில், ஜோஷ் தக்கவைக்கப்பட்டுள்ளது அணி அவர் மீது வைத்துள்ள நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது.
விராட் குறித்து பிலிப்
இவர் இந்த சீசனில் தேவ்தத் படிக்கல்லுடன் சேர்த்து துவக்க ஆட்டக்காரராக களமிறங்குவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் விக்கெட் கீப்பிங்கையும் மேற்கொள்வார் என்று கூறப்படுகிறது. இந்நிலையில் விராட் கோலி மைதானத்தில் மட்டுமே தீவிரமாக போட்டிகளை எதிர்கொள்வார் என்று பிலிப் தெரிவித்துள்ளார்.
பழகுவதற்கு எளிமையானவர்
மைதானத்தில் விராட்டின் ஆக்ரோஷமான செயல்பாட்டால் அனைத்து கேமராக்களும் அவரை போகஸ் செயவதாகவும் ஆனால் மைதானத்திற்கு வெளியில் அவர் மிகவும் இயல்பாகவும் பணிவாகவும் செயல்படுவார் என்றும் பழகுவதற்கு எளிதானவர் என்றும் பிலிப் மேலும் கூறியுள்ளார்.