தென்னாப்பிரிக்கா டூர்
இரு அணிகளுக்கு இடையேயும் முதலில் 3 ஒருநாள் மற்றும் 3 டெஸ்ட் போட்டிகள் கொண்ட தொடரும், 4 டி20 போட்டிகளும் நடத்தப்படவிருந்தது. ஆனால் அந்த நாட்டில் ஓமிக்ரானின் தாக்கம் அதிகமாக இருப்பதால் டி20 போட்டிகள் முழுவதுமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் வரும் டிசம்பர் 16ம் தேதி தொடங்கவிருந்த போட்டிகள் டிசம்பர் 26ம் தேதிக்கு மாற்றப்பட்டது. இதனால் இந்திய அணிகான வீரர்களை தேர்வு செய்வதிலும் தாமதமானது.
அவசர ஆலோசனை குழு
இந்நிலையில் இன்று பயிற்சியாளர் ராகுல் டிராவிட் மற்றும் கேப்டன் கோலிக்கு பிசிசிஐ அவசர அழைப்பு விடுத்துள்ளது. இன்று மதியம் 2 மணியளவில் தேர்வுக்குழு கூட்டம் நடைபெறுகிறது. இதில் முதன்மை விஷயங்களாக துணைக்கேப்டன் அஜிங்கியா ரகானேவை அணியில் தக்கவைக்கலாமா?, இஷாந்த் சர்மாவின் டெஸ்ட் எதிர்காலம் என்ன ஆகியவை குறித்து முடிவு எட்டப்படவுள்ளது.
அணியின் விவரம்
தென்னாப்பிரிக்க சுற்றுப்பயணத்திற்கு மொத்தமாக 25 வீரர்கள் கொண்ட அணியை தேர்வு செய்யவுள்ளனர். ஏற்கனவே தென்னாப்பிரிக்காவில் இந்திய ஏ அணி சுற்றுப்பயணம் செய்து டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. அதில் இருக்கும் சிறந்த வீரர்களும் அழைத்துக்கொள்ளப்படவுள்ளார்கள். இவர்களின் விவரங்கள் அனைத்தும் இன்று மாலை அறிவிக்கப்படும். வரும் டிசம்பர் 16ம் தேதி தென்னாப்பிரிக்காவுக்கு புறப்படுவார்கள் எனத்தெரிகிறது.
Recommended Video
டிராவிட்டின் கோரிக்கை
இந்திய வீரர்களுக்கு சற்று ஓய்வு தேவை என ராகுல் டிராவிட் கேட்டுக்கொண்டிருந்தார். அதன்படி தான் ஒருவார காலம் புறப்பாடு ஒத்திவைக்கப்பட்டது. ஓய்வில் இருந்த ரோகித் சர்மா, ரிஷப் பண்ட், முகமது ஷமி, ஜஸ்பிரித் பும்ரா ஆகியோர் தற்போது பயோ பபுள் வளையத்திற்குள் சென்றுவிட்டனர். இதனால் அவர்கள் நிச்சயம் அணியில் இடம்பெறுவார்கள்.