மும்பை : இங்கிலாந்தில் நடைபெற்றுவரும் இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கிடையிலான முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி பெற்றுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக 117 நாட்களுக்கு பிறகு இந்த தொடர் பல்வேறு பாதுகாப்புகள் மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது.
இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளின் இந்த வெற்றிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார்.
கடினமான உழைப்ப கொடுங்க... எதுக்காகவும் விட்டு கொடுக்காதீங்க... ரெய்னா அட்வைஸ்
கொரோனா வைரஸ் காரணமாக 117 நாட்களாக முடங்கியிருந்த சர்வதேச கிரிக்கெட் போட்டிகள், கடந்த 8ம் தேதி இங்கிலாந்து -மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் நடைபெற்ற டெஸ்ட் போட்டி மூலம் மீண்டும் துவங்கியுள்ளது. இந்த தொடர் பல்வேறு பாதுகாப்பு மற்றும் கட்டுப்பாடுகளுடன் நடத்தப்பட்டது.
மழை போன்றவற்றால் போட்டியின் முதல் நாள் ஆட்டம் தடைபட்ட போதிலும் தொடர்ந்து விறுவிறுப்புடன் நடந்த இந்த முதல் போட்டியில் 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் இங்கிலாந்தை மேற்கிந்திய தீவுகள் அணி வெற்றி கொண்டுள்ளது. இந்நிலையில் இந்த போட்டியில் வெற்றி பெற்றுள்ள மேற்கிந்திய தீவுகள் அணிக்கு இந்திய கேப்டன் விராட் கோலி தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் பாராட்டு தெரிவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட்டின் டாப் வடிவம் என்று அவர் கூறியுள்ளார்.