164 ரன்களில் சுருண்ட ஆர்சிபி
ஐபிஎல்லின் 48வது லீக் போட்டி நேற்றைய தினம் அபுதாபியில் நடைபெற்ற நிலையில் அதில் மும்பை இந்தியன்ஸ் அணி மற்றும் ஆர்சிபி அணிகள் மோதின. போட்டியில் டாஸ் வென்ற மும்பை இந்தியன்ஸ் பீல்டிங்கை தேர்ந்தெடுத்த நிலையில், பேட்டிங் செய்த ஆர்சிபி 164 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்தது.
3 விக்கெட்டுகளை வீழ்த்திய பும்ரா
மும்பை இந்தியன்ஸ் அணியின் ஜஸ்பிரீத் பும்ரா 4 ஓவர்களில் 3 முக்கிய விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஆர்சிபியின் தேவ்தத் படிக்கல் 74, ஜோஷ் பிலிப் 33 ரன்கள் அடித்து அதிரடி ஆரம்பத்தை கொடுத்த நிலையிலும் ஆர்சிபி 164 ரன்களுக்குள் சுருண்டது. இதையடுத்து ஆடிய மும்பை இந்தியன்ஸ் அணி 19.1 ஓவர்களிலேயே வெற்றியை அடைந்தது.
விராட் கோலி பாராட்டு
இதனிடையே, எதிரணி பௌலர்கள் சிறப்பாக பந்துவீசியதாகவும் தாங்கள் அதிகமாக 20 ரன்களை எடுத்திருந்தால் வெற்றியை பெற்றிருக்கலாம் என்றும் ஆர்சிபி கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார். இறுதி 5 ஓவர்களில் தங்களது ரன்குவிப்பை மும்பை பௌலர்கள் கட்டுப்படுத்தியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மும்பை பேட்ஸ்மேன்கள் சிறப்பு
17வது ஓவர்கள் வரையில் வெற்றிக்கான வாய்ப்பு ஆர்சிபிக்கு இருந்ததாகவும் தங்களது பௌலர்களும் சிறப்பாக பந்து வீசியதாகவும் ஆனால் மும்பை இந்தியன்ஸ் அணியின் பேட்ஸ்மேன்கள் சிறப்பாக செயல்பட்டதாகவும் கோலி மேலும் கூறினார். தற்போதைய ஐபிஎல் சீசனில் இறுதிநிலையில் இருந்த அணிகளும் சிறப்பாக விளையாடி வருவதையும் அவர் சுட்டிக் காட்டினார்.