கோலி பிரச்சனை பண்ணாம இருப்பாரா?
கோலி இதற்கு முன் ஆஸ்திரேலியா சென்ற போது எல்லாம் பஞ்சாயத்தை கூட்டி விடுவார். ஒருமுறை ஆஸ்திரேலிய ரசிகர்களை பார்த்து மோசமான சைகை காட்டினார் என்ற பிரச்சனை எழுந்தது. அடுத்து ஸ்டீவ் ஸ்மித் உடன் மோதல் போக்கை கடைபிடித்தார் கோலி. இதனால், இயல்பாகவே கோலி ஆஸ்திரேலியாவில் சென்று கிரிக்கெட் தொடரில் ஆட உள்ளார் என்ற உடன் இந்த முறை என்ன பிரச்சனை வருமோ? என எண்ணத் தோன்றுகிறது. இது பற்றி செய்தியாளர்கள் சந்திப்பில் கேட்ட போது கோலி பதில் அளித்தார்.
இப்போது நான் கேப்டன்
கோலி கூறுகையில், "நான் இளம் வயதில் முதிர்ச்சியற்ற சில விஷயங்களை செய்தேன். ஆனால், இப்போது கேப்டனாக அணி வீரர்களின் தேவையை தாண்டி யோசிக்க எனக்கு நேரமில்லை" என கூறினார்.
திருப்பி அடிக்கவும் தயங்க மாட்டோம்
அதே சமயம் திருப்பி அடிக்கவும் தயங்க மாட்டோம் என கூறினார். "நாங்கள் எப்போதும் திருப்பி கொடுக்கும் பழக்கம் உடையவர்கள். அதுவாக ஆரம்பிக்காத வரை நல்லது. நாங்கள் எதையும் எதிர்பார்க்க மாட்டோம். ஆனால், வந்தால் திருப்பி கொடுப்போம்" என்றார் கோலி.
அணியின் செயல்பாடுகள்
இதை தவிர்த்து இந்திய அணியின் செயல்பாடுகள் பற்றி பேசிய கோலி, இந்திய பேட்ஸ்மேன்கள் நன்றாக ஆடினால் போதும். பந்துவீச்சாளர்கள் 20 விக்கெட்கள் வீழ்த்தும் திறன் பெற்று இருப்பதால் ஆட்டம் எளிதாக இருக்கும் என குறிப்பிட்டார்.