வெஸ்ட் இண்டீஸ் தொடர்
இந்திய அணி அடுத்து ஆகஸ்ட் 3 அன்று துவங்க உள்ள வெஸ்ட் இண்டீஸ் தொடரில் பங்கேற்க உள்ளது. மூன்று டி20, மூன்று ஒருநாள் போட்டிகள் மற்றும் இரண்டு டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்க உள்ளது.
இந்தியாவின் திட்டம்
ரோஹித் சர்மா ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளுக்கு கேப்டனாக செயல்படுவார். விராட் கோலி அந்த இரு தொடர்களின் போதும் ஓய்வில் இருப்பார் என கூறப்பட்டது. காரணம், கோலி ஆஸ்திரேலியா தொடர் முதல் இடைவிடாது போட்டிகளில் பங்கேற்று வருகிறார். எனவே, அவருக்கு ஓய்வு அளிக்கப்படும் என கூறப்பட்டது. இதில் தான் தற்போது மாற்றம் செய்துள்ளார் விராட் கோலி.
விராட் கோலி மாற்றம்
முதலில் ஓய்வில் இருக்கப் போவதாக கூறப்பட்ட நிலையில், தற்போது விராட் கோலி பிசிசிஐ-யிடம் தான் வெஸ்ட் இண்டீஸ் தொடர் முழுவதும் விளையாட தயாராக இருப்பதாகவும், இந்த தொடர் முதல் உலகக்கோப்பை தொடரில் இந்திய அணிக்கு ஏற்பட்ட பின்னடைவை சீர் செய்ய இருப்பதாகவும் கூறி இருக்கிறார்.
காரணம் என்ன?
கோலியின் இந்த மாற்றத்துக்கு அணியின் நிலை மட்டும் தான் காரணமா? அல்லது ரோஹித் சர்மாவை கேப்டனாக்க பிசிசிஐ முயன்று வருவதாக கூறப்படும் நிலையில், தன் கேப்டன் பதவியை தக்க வைக்க முயற்சி செய்கிறாரா? என்ற கேள்வி எழுந்துள்ளது.
ரோஹித்துக்கு பின்னடைவு
இந்திய அணியில் டெஸ்ட் மற்றும் ஒருநாள் அணிக்கு தனித்தனி கேப்டன்கள் நியமிக்கப்பட உள்ளதாக கூறப்படும் நிலையில், வெஸ்ட் இண்டீஸ் தொடரில் ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் விராட் கோலி ஆடினால், அவரே கேப்டனாகவும் செயல்படுவார். ரோஹித் சர்மா கேப்டனாக செயல்பட முடியாது. அது அவருக்கு பின்னடைவாக அமையும்.