லட்சுமணன் முடிவு
இந்தப் போட்டியில் கேஎல் ராகுலின் கேப்டன்ஷி பாஸ் மார்க்கை பெற்றது. இதற்கு முழு காரணம் விவிஎஸ் லட்சுமணன் தான் என்று கருதப்படுகிறது. டாஸ் வென்ற உடன் ஆடுகளத்தின் தன்மையை உணர்ந்து ராகுல் பந்துவீச்சை தேர்வு செய்தார். அதற்கு முழு காரணம் லட்சுமணன் தான் என்று தெரியவந்துள்ளது.ஆட்டத்தின் முதல் சில மணி நேரம் பந்துவீச்சுக்கு ஆடுகளம் சாதகமாக செயல்படும்.
ராகுலின் இடம்
இதனால் பந்துவீச்சை தேர்ந்து எடுக்கும் படி ராகுலிடம் லட்சுமணன் கூறி இருக்கிறார். மேலும், தென்னாப்பிரிக்க தொடரின் ஒருநாள் போட்டியின் போது ரோகித் காயம் காரணமாக இல்லை. அந்த தொடரில் கேப்டன் பதவயில் இருந்த ராகுல், தொடக்க வீரராக களமிறங்கினார். ஆனால், ராகுலின் இடம் நம்பர் 4 தான் என்பதால், அதில் ஏன் அவர் விளையாடவில்லை என்று அப்போது பல விமர்சனம் எழுந்தது.
தடுத்த லட்சுமணன்
இதனை டிராவிட் கண்டுக்கொள்ளாமல் விட்டதாக குற்றச்சாட்டு எழுந்தது. அதே போல் இம்முறையும் ரோகித் இல்லாத நிலையில், கேஎல் ராகுல் தொடக்க வீரராக களமிறங்க பிளான் போட்டுள்ளார். ஆனால் ராகுலின் முடிவுக்கு கிடுக்கு புடி போட்ட லட்சுமணன், ஒருநாள் அணியில் இனி உன்னுடைய இடம் நம்பர் 4 தான்.
நல்ல முடிவு
இதனால் தொடக்க வீரராக களமிறங்கும் எண்ணத்தை கைவிட்டு, கடந்த தொடரில் நன்றாக விளையாடிய சுப்மான் கில்லுக்கு வாய்ப்பு கொடுப்பது தான் சரி என்று கூறியுள்ளார். ராகுல் தன்னுடைய சுயநலத்திற்காக, தொடக்க வீரராக களமிறங்கி இருந்தால், அது சுப்மான் கில்லின் உத்வேகத்தை பாதித்து இருக்கும். ஆனால், விவிஎஸ் அப்படி நடைபெறாமல் தடுத்து விட்டார்.